India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 208.85 டன் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 2023 நவம்பர் முதல் கடந்த 14ம் தேதி வரை காவல்துறை சிறப்பு சோதனை நடத்தியதாகவும், இதன் அடிப்படையில் 21,761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10,155 கடைகள் சீல் வைக்கப்பட்டு, ரூ.17.02 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது இன்று தெரியும். அதிபர் பதவித் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று எதிர்க்கட்சித் தலைவர் அனுரா திசநாயகே முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை பிற்பகலுக்குள் முடிந்து, புதிய அதிபர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நன்மைக்கான சக்தி “குவாட்” என்று PM மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை “குவாட்” என்ற கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. அதன் தலைவர்களின் மாநாடு அமெரிக்காவின் டெலவாரில் நடைபெற்றது. இதில் பேசிய மோடி, குவாட் அமைப்பு தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்தார். மாநாட்டில், இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு தலைமை தாங்குவதற்கு இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேமல் “டீனியா வெர்சி கோலர்” என்னும் வகையைச் சார்ந்தது. இவ்வகை தேமல் உடலில் பெரும்பாலும் கழுத்து, முதுகு, வயிறு ,கை போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படும். சித்த மருத்துவத்தில்; முதலில் கந்தக ரசாயனம்-250-500 மிகி காலை, இரவு என இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும். பின்னர் சீமை அகத்தி களிம்பு- தேமல் உள்ள பகுதிகளில் பூச வேண்டும். இப்படி செய்து வந்தால் தேமல் குணமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இதனால் தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். கடந்த 10-ந் தேதி நடைபெற்ற விவாதத்தில் டிரம்பை விட கமலா சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் விவாதம் நடத்த அழைத்துள்ளார்.
1931-தமிழக எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்தநாள்
1965- இந்தியா- பாக்., இடையில் காஷ்மீர் தொடர்பாக நடைபெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 2014 – நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
இன்று காலை 7 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற விவரத்தை சென்னை மண்டல வானிலை மையம் (RMC) வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், தி. மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலோடு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் RMC குறிப்பிட்டுள்ளது.
45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவின் 10ஆவது சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. USAக்கு எதிராக களமிறங்க இந்திய அணியில் பிரக்ஞானந்தா சீன வீரரிடம் தோல்வியடைய, குகேஷ், அர்ஜூன் வெற்றி பெற்றனர். விதித் போட்டியை சமன் செய்தனர். இதன் மூலம் 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் நாளை டிரா செய்தால் இந்தியா தங்கத்தை உறுதி செய்யும்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது. இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.