India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி லட்டு விற்பனையில் எந்தப் பாதிப்பும் இல்லை என TTD தெரிவித்துள்ளது. திருப்பதி கோயிலில் தயாரித்து விற்கப்படும் லட்டுகளில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், TTD வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரா முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில்களில் லட்டு விற்பனையில் எந்தப் பாதிப்பும் இல்லை. வழக்கம் போல லட்டு விற்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
➤சீனா: 58 அதிகாரிகளுடன் உறவில் இருந்த ‘அழகான ஆளுநர்’ ஜாங் யாங்குக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு ➤காசாவில் பள்ளிக்கூட வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு. ➤ரஷ்யா: கிராஸ்னோடரரை குறிவைத்து நள்ளிரவில் உக்ரைன் ஏவிய 101 டிரோன்களை இடைமறித்து ரஷ்யா அழித்தது. ➤அமெரிக்கா: மீண்டும் விவாதம் நடத்த டிரம்புக்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் NPP கூட்டணி வேட்பாளர் திசநாயகே 53% வாக்குகள் பெற்றிருப்பதால் அவர் புதிய அதிபராவது உறுதியாகியுள்ளது. 50%க்கும் அதிக வாக்குகள் பெறுவோர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 50%க்கும் மேல் திசநாயகே வாக்குகள் பெற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா 22% வாக்குகள் வாங்கியுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்கே (15%) 3ம் இடத்தில் உள்ளார்.
NHAI ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். தொழில்நுட்ப பிரிவு பொது மேலாளர் (20 இடங்கள் ), துணை மேலாளர் (20), மேலாளர் (20) பதவிகளில் காலியாக இருந்த 60 இடங்களுக்கு டெபுடேஷன் அடிப்படையில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு இருந்தது. இதற்கு www.nhai.gov.in இணையதளத்தில் நாளை மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
ஜூலை மாத தொலைத்தொடர்பு சந்தாதாரர் விவரங்களை TRAI வெளியிட்டுள்ளது. அதில் கட்டண உயர்வுக்கு பின், JIO 7.50 லட்சம், ஏர்டெல் 16 லட்சம், VI 14 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், BSNL நிறுவனத்தில் புதிதாக 29 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கூறியுள்ளது. Jio வின் தற்போதைய எண்ணிக்கை 47.57 கோடி, ஏர்டெல் 38.73 கோடி, VI 21.58 கோடி, BSNL 8.85 கோடி என்றும் தெரிவித்துள்ளது.
➤இந்திய ரைபிள் சங்க தலைவராக காலிகேஷ் சிங் தேர்வு. ➤ஹாங்சூ ஓபன் டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் பிரிவின் அரையிறுதிக்கு ஜீவன் நெடுஞ்செழியன் – விஜய் சுந்தர் ஜோடி முன்னேறியது. ➤’யூத்’ ODI தொடர் ஆஸி. அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
➤கால்பந்து வீரர் ரொனால்டோவை கௌரவிக்க 7 யூரோ மதிப்புள்ள ‘சி.ஆர்.7’ என பொறித்த நாணயத்தை போர்ச்சுகல் அரசு வெளியிட உள்ளது.
வடகிழக்கு பருவ மழையின்போது ஒரே மாதத்தில் 2 புயல்கள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அறிக்கை அளித்துள்ளார். அதில் அவர், நவ. 15- டிச.15 வரை 2 புயல்கள் அடுத்தடுத்து உருவாகும் எனவும், இந்த ஆண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலால் தமிழகத்தில் குறுகிய நாள்களில் அதிக மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை மோடி குழி தோண்டி புதைத்து விட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். சட்டபேரவை தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது உரையாற்றிய அவர், சோனியா காந்தி, முஃப்தி, அப்துல்லா குடும்பத்தால் தீப்பற்றி எரிந்ததாக கூறினார். இனி அந்த 3 குடும்பங்கள் முயன்றாலும், அவர்களின் 3ம் தலைமுறையால் கூட தீவிரவாதத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்றார் அவர்.
பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடியை நெருங்க இயலாமல் தோற்று, தொழுது சென்ற இத்திருத்தலத்திற்கு முதலாம் ஆதித்ய சோழன் கோயில் கட்டி எழுப்பியுள்ளார். இங்கு சென்று, அக்னி லிங்க வடிவ இறைவனுக்கு வில்வ மாலை சாற்றி, தீபமேற்றி, தேவாரம் பாடி வணங்கினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத 1950-களிலேயே தனது திறமையின் வழியாக மாபெரும் சகாப்தம் படைத்தவர் பாடகர் பி. பி. ஸ்ரீனிவாஸ். அவர் பாடிய மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை, காலங்களில் அவள் வசந்தம், தாமரை கன்னங்கள்…தேன் மலர் கிண்ணங்கள் உள்ளிட்ட பாடல்கள் தசாப்தங்கள் பல ஆனாலும் அழியாதது. உங்களுக்கு பிடித்த அவரின் பாடல்கள் பற்றி கமெண்ட் செய்யுங்க…
Sorry, no posts matched your criteria.