India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகள் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புழலில் உள்ள பெண்கள் சிறையில் வெளிநாட்டு கைதிகள் உட்பட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நைஜீரிய கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாகவும், இதில் ஒருவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மோதலுக்கான காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுத வேண்டும் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். DMK மீது மக்கள் கோபத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும், இது 2026 தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டார். பேரவைக்கு உதயநிதி வந்தால் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் எழுந்து நிற்பதாகவும் விமர்சித்துள்ளார். எந்த தியாகமும் செய்யாத ஒருவர் துணை முதல்வராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும் அவர் சாடினார்.
அதிமுகவை ஒன்றிணைய விடாமல் தடுத்து 2026 தேர்தலில் வெல்லலாம் என CM ஸ்டாலின் கனவு காண்பதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். அந்த கனவு நிச்சயம் பலிக்காது, அதிமுக ஒன்றுபடும், வீறு கொண்டு எழும் என்றும், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அதிமுக அமைக்கும் என அழுத்தம் திருத்தமாக தெரிவிப்பதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் பல இடங்களில் விரிசல் மற்றும் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சுவர்கள், பிரதான அறையில் அரேபிய மொழியில் பொறிக்கப்பட்ட குரான் வாசகம் இருக்கும் பகுதி உள்ளிட்டவை சேதம் அடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புவதாக கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பை ட்ரம்ப் நிராகரித்தார். காலம் கடந்த அழைப்பு என்றும், அதை ஏற்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த முறை நடந்த விவாதத்தில் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனையடுத்து மீண்டும் விவாதம் நடத்த ட்ரம்புக்கு, கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் நியூ இந்தியா ASSURANCE நிறுவனத்தில் 170 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்கள், நிர்வாக அதிகாரி (Scale 1) நிலையிலானவை ஆகும். வேலைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 10ம் தேதி முதல் www.newindia.co.in இணையதளத்தில் நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 29ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
திமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு எங்கெங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டன? எந்த வகையான தொழிற்சாலைகளில் வேலை வழங்கப்பட்டன? என அவர் கேள்வியெழுப்பி உள்ளார். வேலை பெற்ற 5 லட்சம் பேரும் தமிழர்கள் தானா? என்பன உள்ளிட்ட விவரங்களை வெளியிட அவர் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது (2009 ஆம் ஆண்டு) விடுதலைப்புலிகள் (LTTE) அமைப்பு முழுவதும் அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. எனினும், அவ்வப்போது அறிக்கைகள் வெளிவந்தபடி உள்ளன. இந்நிலையில் 20ம் தேதியிட்டு LTTE பெயரில் புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், வெள்ளையனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புலிகளின் தாகம், தமிமீழத் தாயகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SP வேலுமணி, வைத்திலிங்கம் மீதான வழக்குப்பதிவுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என்ற அச்சத்தில் 2 பேர் மீது திமுக அரசு வழக்குப்பதிவு செய்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம் எனவும், இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ODI கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் இலங்கையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 2ஆம் இடத்தையும் கைப்பற்றியுள்ளது. AUS – 14* (அக். 2023 – செப். 2024) 2ஆம் இடத்திலும், SL – 13 (ஜூன் 2023 – அக். 2023) 3ஆம் இடத்திலும் உள்ளது. முன்னதாக AUS – 21 (ஜனவரி 2003 – மே 2003) முதலிடத்தையும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. SA (10) அணி 4ஆவது இடத்திலும், PAK (10) 5ஆம் இடத்திலும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.