news

News September 22, 2024

₹198க்கு 5G டேட்டாவை வாரி வழங்கும் ஜியோ

image

ஜியோ நிறுவனம் தனது 5G வாடிக்கையாளர்களுக்காக ₹198 கட்டணத்தில் திட்டத்தை நடைமுறையில் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் 14 நாள்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவை ஜியோ வாரி வழங்குகிறது. இதுதவிர்த்து அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 2ஜிபி 4G டேட்டா, தினமும் 100 SMS ஆகியவற்றையும் ஜியோ 14 நாள்களுக்கு அளிக்கிறது. இத்திட்டத்தின்கீழ் ஜியோ க்ளவுட், சினிமா, டிவியும் வழங்குகிறது.

News September 22, 2024

Motor News: உலகின் மிக விலையுயர்ந்த 5 பைக்குகள்

image

உலகின் மிகவும் விலையுயர்ந்த மிரட்டலான டாப்-5 சூப்பர் பைக்குகளின் பட்டியலை FORBES வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ:- ➤நெய்மன் மார்கஸ் லிமிடெட் எடிஷன் ஃபைட்டர் – ₹91 கோடி ➤1949 E90 ஏஜிஎஸ் போர்குபைன் – ₹58 கோடி ➤இகோஸ்ஸி ES1 SPIRIT – ₹29 கோடி ➤
ஹில்டிபிராண்ட் & வொல்ஃப்முல்லர் 1894 – ₹28.96 கோடி (உலகின் முதல் மோட்டார் சைக்கிள்) ➤ BMS நேமிஸிஸ் – ₹24.82 கோடி.

News September 22, 2024

பைடனுக்கு ரயிலை பரிசளித்த மோடி

image

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, பிரதமர் மோடி வெள்ளியால் செய்யப்பட்ட பழங்கால ரயில் மாதிரியை பரிசாக வழங்கினார். கையால் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் மாதிரி மகாராஷ்டிராவைச் சேர்ந்த கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நுட்பங்களான செதுக்குதல், இந்திய உலோக கலைத்திறனின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த பரிசை மோடி வழங்கியுள்ளார். இந்த ரயில் 92.5% வெள்ளியால் ஆனது.

News September 22, 2024

மியான்மர் வெள்ளம்: பலி 384ஆக உயர்வு

image

மியான்மரில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 384ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக நா பி டாவில் 164 பேரும், மாண்டலேவில் 134 பேரும், ஷான் பகுதியில் 78 பேரும் பலியாகியுள்ளனர். இதுதவிர்த்து சுமார் 89 பேரை காணவில்லை என்று மியான்மர் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் மியான்மரின் 9 மாகாணங்களும், அங்கு வசிக்கும் சுமார் 1.48 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News September 22, 2024

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ்

image

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மலப்புரத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பால் சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அவருடன் தொடர்பில் இருந்த 177 பேரிடம் 6 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இந்த சோதனையில் 2 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

News September 22, 2024

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த எலி

image

நார்வேயில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்துள்ளது. இதை கண்ட பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் வேறு விமானம் மூலம் ஸ்பெயின் சென்றனர். பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நிகழ்துள்ளதாகவும், இனி இதுபோன்று நடக்காது எனவும் விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

News September 22, 2024

இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு…

image

புரட்டாசி மாத எதிரொலியாக கறிக்கோழி விலை குறைந்துள்ளது. கறிக்கோழி (உயிருடன்) ஒரு கிலோ ₹104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாள்களாக கறிக்கோழி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. கறிக்கோழி விலை எவ்வளவு குறைந்தாலும் சில்லறை விற்பனை விலையில் அதனை விற்பனையாளர்கள் அமல்படுத்துவதில்லை. இதனால், சில்லறை விற்பனையில் ₹220 வரை விற்பனையாகிறது.

News September 22, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) ஒரு கடல் மைல் (Nautical mile) என்பது எத்தனை கிலோ மீட்டர்? 2) சாலைகளே இல்லாத ஒரே நாடு எது? 3) AD & BC காலம் என்பதன் விரிவாக்கம் என்ன? 4) சீனாவின் பாரம்பரிய உடையின் பெயர் என்ன? 5) மைனாவின் அறிவியல் பெயர் என்ன? 6) புவியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 7) கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 22, 2024

பிரபல ரவுடி சி.டி. மணி கைது?

image

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி. மணி, சேலத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை அடுத்து, சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். அண்மையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் சேலத்தில் வைத்து சி.டி. மணியை போலீஸ் கைது செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News September 22, 2024

இந்தியாவில் தாக்குதல் நடத்த 900 தீவிரவாதிகள் ஊடுருவல்?

image

இந்தியாவில் தாக்குதல் நடத்த 900 குகி தீவிரவாதிகள், மியான்மரில் இருந்து ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 900 பேரும், ட்ரோன் மூலம் குண்டுவீசுவது, ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது, போர் பயிற்சி உள்ளிட்டவற்றை பெற்று இருப்பதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என உளவுத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!