India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோலில் ஏற்படும் கருநிறத் திட்டுகளை போக்கும் ஆற்றலை பொடுதலை கொண்டிருப்பதாக நவீன மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. ஆன்சியோலிடிக், ரூடின், டிரைடெர்பினாய்ட்ஸ், நோடிஃபுளோரிடின், போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த அதன் காய், இலையை இடித்துச் சாறு பிழிந்து, மஞ்சள் சேர்த்து மையாக அரைத்து, கருநிறத் திட்டுகள் மீது தடவி வந்தால், மெலனின் உற்பத்தி அளவு முறையாகி மேனி பொலிவுறும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேட்ட ராப்’. இந்த படத்தில் இசை வெளியிட்டு விழாவில் பேசிய அவர், “பாடலாசிரியர்களை கண்டால் பிரமிப்பாக இருக்கும். படித்தவர்கள் என்பதால் பயமாகவும் இருக்கும். இருப்பினும், படத்திற்காக அவர்களிடம் அவ்வப்போது பேசுவேன். MGR ஃபார்முலாவை பின்பற்றுவதால், சில சொற்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன். பாடல்களில் திருத்தம் செய்ய வலியுறுத்துவேன்” என்றார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்களிடையே பீதி நிலவுகிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 11.45 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர்.
மகள்களை கொண்டாடும் விதமாக இந்தியாவில் ஆண்டுதோறும் செப்.22ஆம் தேதி தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பெண் குழந்தைகளை கொண்டாடும் வகையில் CSK அணியின் வீரர்கள் தங்கள் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை அந்த அணி X பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், நம் வாழ்க்கையை அன்பினால் நிரப்பும் மகள்களை கொண்டாடுவோம் என்று பதிவிடப்பட்டுள்ளது.
உ.பி-யில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. இன்று காலை கான்பூரில் இருந்து பிரயாக்ராஜிக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. பிரேம்பூர் அருகே சென்ற போது தண்டவாளத்தில் சிலிண்டர் இருப்பதை ஓட்டுநர் கவனித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், எமர்ஜென்சி பிரேக் மூலம் ரயிலை நிறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
சென்னை டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது 8ஆவது வீரராக களமிறங்கி 113 ரன்கள் குவித்தார் அஸ்வின். அவரது சதத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு நல்ல ஸ்காேரை எட்டியது. 2ஆவது இன்னிங்சில் 21 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகள் சாய்த்து 88 ரன்களை மட்டும் அஸ்வின் கொடுத்தார். இதன்மூலம் களத்தில் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை அஸ்வின் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்தியா, வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மூன்றரை நாள்களில் முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் வங்கதேசம் கலக்கியது. எனினும், முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அந்த அணி சொதப்பியது. அதேநேரத்தில் 2ஆவது இன்னிங்சில் அந்த அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 63ஆவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் 515 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணி இன்று விளையாடியது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது தவறில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து இபிஎஸ் உள்ளிட்டோர் அறிக்கை கோருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம், அதிமுக ஆட்சியில் கையெழுத்தான ஒப்பந்தம், வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கையை இபிஎஸ் முதலில் வெளியிட வேண்டும் என்றார்.
அமெரிக்க பல்கலை. பேராசிரியர் குழு வெளியிட்ட உலகின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகள் பட்டியலில் மதுரை காந்தி கிராம பல்கலை. பேரா.மீனாட்சி இடம்பிடித்துள்ளார். வேதியியல் விஞ்ஞானியான அவர், கழிவு நீரில் இருந்து ஃபுளூரைடு போன்ற நச்சுக்களை உறிஞ்சு நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 5ஆவது ஆண்டாக மீண்டும் அவர்தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.