India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரீன் கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டினர் உள்பட அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் facial recognition மற்றும் பயோமெட்ரிக் சோதனைக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் வைத்திருப்பவர்களை கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று போல் இன்றும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதன்படி சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்ந்து 84,887 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 26,000 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. HDFC, BHARATHI AIRTEL, SBI உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேநேரம், ICICI, BAJAJ FINANCE, AXIS BANK உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன.

‘SIR’ என்றாலே திமுகவுக்கு பயம் என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவ.4-ல் தொடங்குகிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் TN-ல் மேற்கொள்ள கூடாது என திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவான போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதால்தான் SIR-யை திமுக எதிர்ப்பதாக நயினார் கூறியுள்ளார்.

கால்பந்து உலகின் அரசன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், 2026 உலகக்கோப்பையில் விளையாட விரும்புவதாக அவரே தெரிவித்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், உடற்தகுதி இருந்தால் மட்டுமே பங்கேற்பேன் எனவும் கூறியுள்ளார். தற்போது அவர் இன்டர் மியாமி அணி சார்பாக கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை இன்று(அக்.28) சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகிறது. <<18124580>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை மளமளவென சரிந்து வரும் நிலையில், நம்மூரிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இது வரும் சில நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவம் 1947-ல் காஷ்மீரை ஆக்கிரமித்ததாக கூறி, ஆண்டுதோறும் அக்.27-ஐ கருப்பு நாளாக பாக்., கடைப்பிடித்து வருகிறது. இதனையொட்டி PAK PM ஷெபாஸ் ஷெரீப் & PAK அதிபர் ஆசிப் அலி சர்தாரி, காஷ்மீர் மக்களையும், அவர்களின் உரிமையையும் இந்தியா நிராகரிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை எனவும், அவர்களுடன் 24 கோடி பாகிஸ்தானியர்கள் நிற்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆஸி.,க்கு எதிரான முதல் ODI போட்டியில் சொதப்பிய ரோஹித், 2-வது (73 ரன்கள்), கடைசி (121 ரன்கள்) போட்டிகளில் ரன்களை குவித்தார். தனது ரன்களை வைத்தே ரசிகர்கள் தன்னை மதிப்பிடுவார்கள் என்பதை ரோஹித் புரிந்து வைத்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 20 பந்துகளில் 40 ரன்கள் என்ற அதிரடி விளையாட்டை ரோஹித் விளையாட விரும்பவில்லை என்ற அவர், களத்தில் நீண்ட நேரம் இருக்க விரும்புவதாகவும் கூறினார்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. ₹100 கொடுத்தால் போதும் போராட்டத்துக்கு வந்துவிடுவார்கள் என மூதாட்டி ஒருவரை கேலி செய்யும் வகையில், பகிரப்பட்ட Meme-ஐ கங்கனா ரனாவத் Retweet செய்திருந்தார். இதற்கு எதிராக மூதாட்டியின் கணவர் பஞ்சாப் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜரான கங்கனா தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார்.

சுயேச்சை MLA நேரு, ‘நமது மக்கள் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 2021 தேர்தலில் உருளையன்பேட்டையில் வென்ற அவர், ஆளும் NR காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து வந்தார். இதனிடையே, CM ரங்கசாமி, பாஜகவுடன் சேர்ந்து தனது தனித்தன்மையை இழந்ததால் புதிய கட்சி தொடங்க வேண்டிய நிலை உருவானதாக நேரு கூறினார். கட்சி தொடக்க விழாவில் பெரியார் படம் இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் எந்தெந்த மாவட்டங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆகஸ்ட் 2025 மாதத்தின் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யவும்.
Sorry, no posts matched your criteria.