India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤இங்கிலாந்து: ஆக்ஸ்போர்டு பல்கலை. செயல்பாடுகளில் தலையிட்ட சீன ஆதரவு பெற்ற 30 கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத்தை நிறுத்த இங்கிலாந்து கல்வித்துறை முடிவு. ➤ரஷ்யா: நவம்பரில் உக்ரைன் நடத்தும் 2ஆவது அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு. ➤அமெரிக்கா: அலபாமா மாகாண பல்கலைக்கழகம் அருகே ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி – மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. வட தமிழகம், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2 நாளைக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் RMC குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
அம்மா உணவகம் குறித்த திமுக அமைப்பு செயலாளர் <<14167794>>ஆர்.எஸ். பாரதி<<>> கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்ட X பக்க பதிவில், ஆர்.எஸ்.பாரதியை கார்ப்பரேட் கைக்கூலி என சாடியுள்ளார். மேலும் அம்மா உணவகம் குறித்த ஆர்.எஸ்.பாரதியின் எண்ணம் திமுகவின் அழிவுக்கான பாதை என்றும் ஜெயக்குமார் சாடியுள்ளார். அம்மா உணவகம் குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்க
NHAI-இல் அறிவிக்கப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தொழில்நுட்ப பிரிவு பொது மேனேஜர் (20 இடங்கள் ), தொழில்நுட்ப பிரிவு துணை மேலாளர் (20), மேலாளர் (20) பதவிகளில் காலியாக இருந்த 60 இடங்களுக்கு டெபுடேஷன் அடிப்படையில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு இருந்தது. இதற்கு www.nhai.gov.in இணையதளத்தில் இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
பஞ்சபூத தலங்களில் வளி தலமான ஆந்திராவின் சித்தூர் திருக்காளத்தி காளத்தீஸ்வரர் கோயில் சம்பந்தரால் பாடப் பெற்ற தலமாகும். கண்ணப்ப நாயனாருக்கு ஈசன் முக்தி அளித்த இந்த திருத்தலத்திற்கு பல்லவர் அரசு கோயில் கட்டி எழுப்பியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. இங்கு சென்று, வாயு லிங்கத்த்திற்கு வில்வ மாலை சாற்றி, தீபமேற்றி வணங்கி, ராகு – கேது பரிகார பூஜைகள் செய்தால் கிரக தோஷ நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் இந்திய அரசு இனியும் பொறுமை காக்க கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அன்புமணி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை இலங்கை அரசு பறித்துக் கொண்டிருப்பதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான திருவேங்கடம் ஏற்கெனவே என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி <<14170391>>சீசிங்<<>> ராஜாவை போலீஸ் தேடி வந்தது. மேலும் இன்னொரு ரவுடி சி.டி. மணியையும் போலீஸ் நேற்று கைது செய்தது. இந்த சூழ்நிலையில் நீலாங்கரை அருகே சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் <<14170391>>சீசிங் <<>>ராஜாவை போலீஸ் நேற்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தது. நீலாங்கரை அருகே வந்தபோது மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து போலீசை சீசிங் ராஜா சுட்டதாகவும், இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக நடத்திய என்கவுன்ட்டரில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சீசிங் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி சீசிங் ராஜா, போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். ஆந்திராவில் நேற்று அவரை தனிப்படை போலீஸ் கைது செய்தது. இதையடுத்து விசாரணைக்கு அழைத்து வந்தபோது, அவர்களை சீசிங் ராஜா தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானதாக கூறப்படுகிறது.
நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பூ என்று பொருள்படும் Pushp என்ற வார்த்தைக்கு புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”P-முன்னேறும் பாரதம்: U-தடுக்க முடியா பாரதம்: S-ஆன்மிக பாரதம்: H-மனிதநேயமே முதன்மை என்ற கோட்பாடு: P-வளம் மிக்க இந்தியா; ஆகியவற்றை குறிக்கும். Pushp-ன் இந்த 5 இதழ்களும் வளமான பாரத்தை உருவாக்கும்” என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.