India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் கணித்துள்ளது.
மாரடைப்பு இளம் வயதினருக்கும் ஏற்படுமா? என்ற கேள்விக்கு, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என இதயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதயத் தசை & அமைப்பு கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பருமனாவது, தலைவலி, குளிர்ந்த வியர்வை, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இபிஎஸ் கடந்த வாரம் சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் சென்றார். அப்போது, அவர் அருகே அமர்ந்து தலைமை செயலகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் பயணித்ததாகவும், அரசு விவகாரம் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதை அதே விமானத்தில் பயணித்த திமுக MLA பார்த்து அக்கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தியதாகவும், இதனால் அந்த அதிகாரி மீது திமுக அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு இத்தகைய கருத்தை தெரிவிக்கக் கூடாது என்றும், மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் SC உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, CM-க்கு எதிராக தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் SC-ஐ நாடியிருந்தார்.
சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக டிட்டோஜாக் (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு) அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு உறுதியளித்ததால், செப்.30இல் திட்டமிட்டிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது. தங்களின் கோரிக்கை விரைவில்
நிறைவேற்றப்படும் எனவும் டிட்டோஜாக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
6 தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்திருப்பதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கூட்டமைப்பு நிர்வாகிகள், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 28 படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தனர். தமிழில் தங்கலான், கொட்டுக்காளி, வாழை, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜமாவை பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்காேரி, மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில், தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கையில் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், மீனவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க உதவ வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அக்.7 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன்
இருப்பதாக செய்திகள் வெளியாகின. காசாவில் அவர் பதுங்கி இருந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. அந்த தாக்குதலில் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் வட்டாரங்கள் கூறியதாக Newyork Post செய்தி வெளியிட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் ₹999 கட்டணத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 98 நாள்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் 5G டேட்டாவை ஜியோ வழங்குகிறது. இதுதவிர்த்து 5G கவரேஜ் இல்லாத பகுதி எனில் தினமும் 2ஜிபி 4G டேட்டா அளிக்கிறது. அத்துடன் அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 100 SMS, நாடு முழுவதும் இலவச ரோமிங் உள்ளிட்டவற்றையும் ஜியோ வழங்குகிறது.
அமெரிக்க ராணுவம் & இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்கான செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை கொல்கத்தாவில் அமைக்கப்படவுள்ளது. இது தொடா்பான ஒப்பந்தம், மோடி & ஜோ பைடன் முன்னிலையில் கையொப்பமானது. 2025இல் ‘சக்தி’ என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு துறைக்கான இந்த ஆலையில் Next Gen தொலைத்தொடர்பு, பசுமை எரிசக்திக்கான செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.