India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் மூலம் அன்னை தெரசா ஆதரவற்ற மகளிர் திருமண உதவித் திட்டம், முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட 4 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், இத்திட்டங்களின் கீழ் வழங்குவதற்காக ரூ.48.13 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. 8 கிராம் எடையுள்ள 8,000 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் 2வது இன்னிங்சில் இந்தியா 287 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ரோஹித் டிக்ளேர் செய்தார். அப்போது KL ராகுல் 22* ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், டெஸ்டில் சற்று தடுமாறிவரும் KL ராகுல் 60 ரன்கள் அடிக்கும் வரை ரோஹித் பொறுத்திருந்திருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்சில் KL ராகுல் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
பயனாளர்களை கவர புதுப்புது அப்டேட்களை வழங்கும் வாட்ஸ்அப், தற்போது புதிய தீம் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பயனாளர்கள் தங்கள் CHATகளின் தோற்றத்தை மாற்றலாம். குறிப்பாக, விருப்பமானவர்களுக்கு என தனித்தனியாக தீம்களை வைத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆராய்ச்சியில் இருக்கும் இந்த புதிய வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என WABetainfo தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஏழுமலையான் பக்தர்களை மீளா துயரத்திலேயே ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்த தோஷத்தை நீக்க, பக்தர்கள் தங்கள் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறும், ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை உச்சரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலை உருவாக்கி, மழைக்காலம் வெள்ள பாதிப்பை குறைக்கலாம் என்று தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் யோசனை வழங்கியுள்ளது. விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ளது. எனவே, நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால், பெருமழைக் காலங்களில் அதிக நீரை சேமிக்க முடியும். இதுதொடர்பாக, அரசின் கருத்தை அறிந்து தீர்ப்பாயத்தில் தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரிபுதிரி வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸின் போது, ஒரு திசையில் எந்த பீல்டரும் இல்லாததை கண்ட ரிஷப் பண்ட், அதை வங்கதேச கேப்டன் சாண்டோவுக்கு சுட்டிக்காட்டினார். இதை ஏற்ற சாண்டோவும், அங்கு பீல்டரை நிறுத்தினார். “எதிரி யாராக இருந்தாலும் நமது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அஜய் ஜடேஜா கூறுவார். அதைதான் நானும் செய்தேன்” என்றார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து என்கவுன்ட்டர் அரங்கேறி வருவதால், ரவுடிகள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், திருவேங்கடம், பாலாஜி, சீசிங் ராஜா உள்ளிட்டோர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நிலையில், 6 ரவுடிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். சீறிப்பாயும் போலீஸின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பயந்து, கஞ்சா போன்ற போதைப் பொருளை கடத்துவது, விற்பதை ரவுடிகள் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த விக்கெட் கீப்பர் யாரென தோனியையும் ரிஷப் பண்டையும் ஒப்பிடுவது சரியில்லை என்று டி.கே. தெரிவித்துள்ளார். வங்கதேச முதல் டெஸ்டில் சதமடித்து, 6 சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை பண்ட் சமன் செய்தார். இதையடுத்து யார் சிறந்த கீப்பர் என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இதுகுறித்து பேசிய கார்த்திக், தோனியை குறைத்து மதிப்பிடக் கூடாது, பண்ட் ஆட்டத்தை மதிப்பிட இன்னும் காலம் உள்ளது என்றார்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் விவாதங்களில் பிறரால் வெல்ல முடியாதவர்களாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செயல் திறமை, தன்னம்பிக்கை, கலை மீது நாட்டம், ஆராய்ச்சி செய்வதில் விருப்பம் கொண்ட நீங்கள் பல துறைகளிலும் ஞானம் உடையவராக இருப்பீர்கள். நேரம் பார்த்து எதிரிகளை வீழ்த்துவதில் வல்லவர் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி (71.67%) முதலிடத்தை தக்க வைத்தது. ஆஸி. அணி (62.50%) 2ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை, நியூசி., இங்கிலாந்து, வங்கதேசம், தெ.ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை முறையே 3 முதல் 9 வரையிலான இடங்களை வகிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.