India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு அக்.27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்கு விஜய் கட்டுப்பாடு விதித்துள்ளார். மாநாட்டிற்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்கள், பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பள்ளி உதவியாளர் அக்ஷய் ஷிண்டே (23) என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து அம்மாநில CM ஏக்நாத் ஷிண்டே விளக்கமளித்துள்ளார். அவரது Ex மனைவி கொடுத்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது போலீசாரை துப்பாக்கியால் சுட்டதால் என்கவுண்டர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரது தாக்குதலில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். அடுத்த மாதம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த ஆண்டு யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகளாக ‘மகாராஜா’ படத்தில் நடித்த சஞ்சனா இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் பயிலும் 2 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளி உதவியாளர் அக்ஷய் ஷிண்டே (23) கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணைக்காக இன்று ஷிண்டேவை அழைத்துச் சென்ற போது, சப் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை பறித்து அவரை சுட்டதாக தெரிகிறது. பின்னர் தப்பியோட முயன்றவரை போலீஸார் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
இளநீர் இட்லி ருசிக்கும் குடும்பத்திற்கு பசி கொடுமை புரியுமா? என ஜெயக்குமார் கேள்வியெழுப்பி உள்ளார். அவரின் X பக்க பதிவில், எத்தனையோ இளைஞர்களுக்கு கடினமான நேரத்தில் தாயுள்ளத்துடன் உணவிட்டு பசியாற்றியது அம்மா உணவகம் என்றும், இன்றைக்கு அம்மா உணவகங்கள் அரசின் நிதியின்றி மூடும் நிலையில் உள்ளது என்றும், இதனால் பலர் பசியோடு வாழ்க்கையை நகர்த்தும் அவலத்தில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 95 கோடி மக்களை இணைய சேவை சென்றடைந்துள்ளதாக, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். செல்போன் தொலைத்தொடர்பு இணைப்புகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 90 கோடியில் இருந்து 117 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், உலக அரங்கில் தொலைத்தொடர்புத்துறை சந்தையில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர், தனக்கு தானே சாபமிட்டு கொண்டார். திருப்பதி கோயில் தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு வந்த அவர், திடீரென கையில் கற்பூரத்தை ஏந்தி, “நான் தலைவராக இருந்த போது லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும்” எனக் கூறி உணர்ச்சிவசப்பட்டார்.
TNPSC குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த செப். 14-ம் தேதி நடைபெற்றது. 2,327 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில், இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச விடைக்குறிப்பு (Answer Key) தற்போது வெளியாகியுள்ளது. TNPSC-இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இது வெளியாகியுள்ளது. தங்கள் விடைகளை தேர்வர்கள் சரிபார்க்க இது நல்ல வாய்ப்பாகும்.
AI மூலம் வரும் வாய்ப்புகளை பயன்படுத்தும் இடத்தில் இந்தியா உள்ளதாக, Nvidia CEO ஜென்சன் ஹுவாங் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கான தருணம் இது எனக் குறிப்பிட்ட அவர், வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக USA சென்ற PM மோடி, AI, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவை குறித்து நடந்த கருத்தரங்கில் கூகுள், Nvidia CEOக்கள் சுந்தர் பிச்சை, ஜென்சன் ஆகியோருடன் பங்கேற்றார்.
இந்தியாவில், கருத்தியல் அடையாளமாக வாழ்ந்தவர் சீதாராம் யெச்சூரி என CM ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சீதாராம் யெச்சூரியின் மறைவை அடுத்து, சென்னையில் அவரது நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய CM, இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் யெச்சூரி எனவும், அனைவருக்கும் அவர் சொந்தமானவர் எனவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். முன்னதாக அவரது உருவப் படத்திற்கு CM மரியாதை செலுத்தினார்.
Sorry, no posts matched your criteria.