India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி <<14176075>>தாக்குதலில் <<>>உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247-ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா படையினரை குறிவைத்து கடந்த 3 தினங்களாக இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், ஹிஸ்புல்லா படையினர் மட்டுமல்லாமல் பெண்கள், குழந்தைகள் என அப்பாவி பொதுமக்களும் இதற்கு இரையாகி வருவதுதான் வேதனையின் உச்சம்.
*நீரில் புதினாவை கொதிக்கவிட்டு வடிகட்டிய பிறகு சிறிது எலுமிச்சை, தேன் கலந்து பருகலாம்.
*வெதுவெதுப்பான பாலில் அரை ஸ்பூன் அத்திக்காய் பொடியை கலந்து அருந்தலாம்.
*இஞ்சி டீயை இரவில் குடித்தால் செரிமானப் பிரச்னை நீங்கி அமைதியாக தூங்கலாம்.
*தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு, சர்க்கரை சேர்க்காத சீமைச்சாமந்தி பொடி கலந்த டீயை குடித்தால், மன அழுத்தம் விலகி ஓடும். தூக்கம் கண்ணை கட்டும்.
ரூ.200 கோடி பட்ஜெட்டில் பான் இண்டியா மூவியாக உருவாகி வரும் தெலுங்கு திரைப்படம் ‘கண்ணப்பா’. முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் பிரபாஸ், நயன்தாரா, மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் இப்படத்தில் உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா, ‘மாரியம்மா’ என்ற கதாபாத்திரத்தில் வருவதாக அப்டேட் வந்துள்ளது. சிவனடியார் தோற்றத்தில் அமானுஷ்யமாக அவரது பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளித்து, அக்.3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு அக்.4ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் பள்ளிகள் இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அக்.4 வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.நா.வின் 79-வது பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவை பொறுத்தவரை, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்கி வருகிறது. அப்படி அனைவரையும் ஒரே குடும்பமாக கருதியதால்தான் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். மனிதத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் அல்ல, ஒற்றுமையால் தீர்மானிக்கப்படுவது என்பதே எங்கள் கொள்கை எனக் கூறினார்.
சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ‘லப்பர் பந்து’ படத்தை இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது X தள பதிவில், சமீபத்தில் தான் திரையில் பார்த்த சிறப்பான படம் என்றும், விளையாட்டு சம்பந்தமான வழக்கமான படங்களை போல அல்லாமல், யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகழ்ந்துள்ளார். மேலும், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் இயக்குநரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அரசு திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், மதுரையில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி, அரசு திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் தொய்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை உட்பட அனைத்து திட்டங்களும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கி, சென்னை, கோவை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் 9ஆவது அதிபராக தேர்வாகியுள்ள அனுரா குமார திசநாயகேவுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், கடந்த காலங்களை போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்க புதிய அதிபர் அனுரா குமார திசநாயகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் லப்பாட்டா லேடிஸ். குடும்ப வன்முறை, பெண் கல்வி போன்றவற்றை அழுத்தமாக பேசியிருக்கும் திரைப்படம் இது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்குள் Laapataa Ladies நுழைந்துள்ளது. மகாராஜா, கொட்டுக்காளி, வாழை, தங்கலான் போன்ற தமிழ் படங்கள் ஆஸ்கர் போட்டியில் இருந்த நிலையில், இத்திரைப்படம் அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்வாகியுள்ளது.
பெங்களூர் போக்குவரத்து நெரிசல் குறித்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தா, மைசூர் மேம்பாலம் அருகே உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, உச்ச நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார் நீதிபதி ஸ்ரீசானந்தா.
Sorry, no posts matched your criteria.