India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நியூயார்க்கில் இந்தியா – உக்ரைன் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இது குறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்து அவரிடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடித்துள்ள ’வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்.10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘2018’ திரைப்படத்தின் இயக்குநர், ஜூட் ஆண்டனியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போப் ஆண்டவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “லேசான காய்ச்சல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வரும் நாட்களின் பெல்ஜியம், லக்சம்பர்க் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதால் திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஸ் பைக்குகளுக்கு பெயர் போன Yamaha நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய RayZR பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் சில சிறப்பம்சம்சங்களும் உள்ளன. உதாரணமாக வாகன கூட்டத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் பைக்கை, மொபைல் செயலி மூலம் கண்டறியும் ‘Answer Back’ என்ற புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ₹98,130ஆக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1898 – அமெரிக்க மிசன் யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமைத்தது. 1932 – பூனா ஒப்பந்தம்: மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு காந்தி, அம்பேத்கர் ஒப்புதல் அளித்தனர்.
2013 – தெற்குப் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 327 பேர் உயிரிழந்தனர்.
2014 – மங்கள்யான் விண்கலம் ISRO-வால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் படைகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படை (UNIFIL) பணியின் ஒரு பகுதியாக இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 600 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சமீபத்திய தாக்குதல்களின் பின்னணி நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்திற்கும், அதில் கேப்டன் jack sparrow-வாக வரும் நடிகர் ஜானி டெப் செய்யும் சேட்டைகளுக்கும் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் உலகளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இத்தாலியில் நடைபெறவுள்ள ரோம் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
சண்முக பாண்டியனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் சசிகுமார் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ”விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே அவரை வைத்து குற்றப்பரம்பரை நாவலை இணையத் தொடராக எடுக்க நினைத்தேன் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. குற்றப்பரம்பரையை இயக்குவேனோ இல்லையோ, நிச்சயம் சண்முக பாண்டியனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன்.” எனத் தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கவுகாத்தி உள்ளிட்ட நகர பகுதிகள் அடங்கிய காம்ரூப் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று முதல் வருகிற 27-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
*சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட உலகில் துன்பகரமானது எதுவும் இல்லை.
*இருளை இருளால் விரட்ட முடியாது, ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது, அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
*சரியானதைச் செய்வதற்கு, எப்பொழுதுமே சரியான நேரமாகும்.
Sorry, no posts matched your criteria.