India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிரிக்கெட்டை காதலிக்கும் இந்தியர்கள் யாரும், 2007 செப் 24ஐ மறக்க மாட்டார்கள். PAK-ஐ வென்று டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய தினம். அப்போது நீண்ட தலைமுடியுடன் தோனி, முழுவதும் இளம் வீரர்கள், உற்சாகம் பீறிடும் வகையில் பந்துவீச்சு, ஃபீல்டிங், தேவைக்கு ஏற்ப அதிரடி ஆட்டம் என அனைத்தும் கலந்த கலவையாக இந்திய அணி இருந்தது. 17 ஆண்டுகள் கடந்தாலும், அந்த நினைவுகளை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது.
லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து கடந்த 4 தினங்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள், முதியோர்கள் என 500 பேர் பலியான நிலையில், 1,500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலுக்கு அஞ்சி லெபனான் மக்கள் நாட்டின் வடக்கு பகுதியை நோக்கி செல்கிறார்கள்.
கடந்த 10ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. டிட்டோஜாக் (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு) பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அன்றைய தினம் சுமார் 30.5% ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் EPF கணக்கு 2.6% அதிகரித்துள்ளதாக EPFO தெரிவித்துள்ளது. அதன்படி, சுமார் 10.5 லட்சம் ஊழியர்கள் புதிதாக EPF கணக்கு தொடங்கியுள்ளனர். இதில் 3.05 லட்சம் பேர் பெண்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜூன் மாதத்தில் 10.2 லட்சம் ஊழியர்களும், மே மாதத்தில் 9.85 லட்சம் ஊழியர்களும் EPF கணக்கு தொடங்கி இருந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஹரியானாவில் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
செப்.14இல் நடைபெற்ற TNPSC குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்வை 2,763 தேர்வு மையங்களில் 7.93 லட்சம் பேர் எழுதினர். இதனிடையே, தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகளை 7 நாள்களுக்குள் இணைய வழியில் தெரிவிக்கலாம்.
தலித் தலைவர்கள் காங்கிரஸிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என BSP தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். CONG மற்றும் மற்ற சாதிக் கட்சிகள் ஆரம்பம் முதல் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனால்தான் ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் பேசியதாகவும் விமர்சித்தார். கடினமான நேரத்தில் மட்டுமே தலித்துகளுக்கு CONG CM பதவியை வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே NIA அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக இச்சோதனை நடப்பதாகத் தெரிகிறது.
தென் திருப்பதி என போற்றப்படும் குணசீலத்தில் திருக்கரத்தில் செங்கோல் ஏந்தியபடி குணசீல பெருமாள் காட்சி தருகிறார். இங்கு உள்ள பிரசன்ன வெங்கடாசலபதியை தொழுதால், நல்ல குணநலன்களையும், ஐஸ்வர்யத்தையும் அருள்வார் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். திருச்சியில் இருந்து 26 km தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி பிரம்மோற்சவம் போன்றவை இத்தலத்தின் விசேஷ நாள்கள்.
குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், இந்தியாவில் முதல்முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில்,” இந்தியாவில் குரங்கம்மையின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும். இந்நோய் பெரிய அளவில் பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க மாநிலங்கள் தயாராக உள்ளதாகவும், மக்கள் பீதியடையத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில், நள்ளிரவில் ஒருசில பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கிக் காணப்படுகின்றன. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
Sorry, no posts matched your criteria.