India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கொளத்தூரில் ரூ.4.23 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் புதிய புத்தகப்பை மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கினார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியா, திமுக எம்பி வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர் பக்கம்தான் நிற்க வேண்டுமென வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம்தான் கேள்விகள் எழுப்பப்படுவதாகக் கூறினார். மேலும், “நீங்கள் ஏன் அப்போதே கூறவில்லை? நீங்கள் இடம் கொடுக்காமல் இப்படி நடந்திருக்குமா?” எனக் கேட்பதே மிக மோசமான விஷயம் என்றார்.
AI மாடலை உருவாக்க பயனர்களின் தரவுகளை சமூக வலைதளங்கள் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில தளங்கள் AI பயிற்சிக்காக தரவுகளை பகிர்வதிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தை பயனர்களுக்கு வழங்குகின்றன. அதேநேரம், Public போஸ்டை 3ஆம் தரப்பினர் பயன்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், தங்கள் தரவுகளை பயன்படுத்துவதை பலரும் விரும்பவில்லை எனத் தெரிகிறது.
திரெளபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் மோகன்ஜியை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்ன காரணத்திற்கு அவர் கைது செய்யப்பட்டார், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் போன்ற எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பான கைதுகள் தொடர்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
‘மூடா’ நில முறைகேடு விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி சித்தராமையா தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சித்தராமையா மனைவி பார்வதிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்தார். ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய சித்தராமையா வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.
ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம் விலை இன்று ₹20 உயர்ந்து ₹7,000ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ₹160 அதிகரித்து ₹56,000ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலையில் புதிய உச்சம் ஆகும். அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ₹98ஆகவும், 1 கிலோ வெள்ளி ₹98,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூருவில் இருந்து நந்தினி நெய் கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் கர்நாடக அரசு நிறுவனமான நந்தினியில் கூடுதல் நெய் கொள்முதல் செய்கிறது. கலப்படம் நடப்பதை தவிர்க்கும் விதமாக நெய் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ்., ஸ்கேனர் லாக் பொருத்தப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்டெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, தமிழகத்தில், போலீஸ், ரவுடிகள், அரசியல்வாதிகள் உதவியுடன் நில அபகரிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வழக்கு விசாரணை ஒன்றில் ஐகோர்ட் வேதனை தெரிவித்திருந்தது.
IND எதிரான 2ஆவது டெஸ்டில் BAN வீரர் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. முதல் டெஸ்டில் பும்ரா பந்துவீச்சில், அவர் காயமடைந்தார். இதனால் குறைவான ஓவர்களே அவர் பந்துவீசினார். அவரின் காயத்தை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், குணமடைந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்பார் எனவும் BAN அணி நிர்வாகம் கூறியுள்ளது. முதல் டெஸ்டில் IND வென்ற நிலையில், வரும் 27இல் 2ஆவது போட்டி நடக்கிறது.
அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோலுக்கு செபி ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது. RHFL நிறுவனத்தில் முறைகேடு செய்ததாகக் கூறி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசா கேபிட்டல் பார்ட்னர்களுக்கு ₹20 கோடியும், அக்யூரா புரொடக்ஷன் நிறுவனத்துக்கு ₹20 கோடியும் விதிகளை மீறி கடன் வழங்க அவர் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அந்நிறுவன CRO கிருஷ்ணனுக்கு ₹15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.