India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி பஞ்சாமிர்தத்தில் கருக்கலைப்பு மருந்து பயன்படுத்துவதாக யூடியூப் சேனல் ஒன்றில் இயக்குநர் <<14180712>>மோகன் ஜி<<>> கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருச்சி எஸ்.பி. வருண் குமார் உத்தரவின் பேரில் சென்னை ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரை போலீசார் திருச்சிக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அரசுப் பணியாளர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உ.பி. அரசு ஆணையிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்படாது என்றும் எச்சரித்துள்ளது. முன்னதாக கடந்த ஆக.31-க்குள் சமர்பிக்க கெடு நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 8.44 லட்ச ஊழியர்களில், இதுவரை 7.19 லட்சம் பேர் சொத்து விவரங்களை அரசு இணையதளத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இந்த படத்தை, ‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். படத்தின் ப்ரீபுரொடக்சன் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மூடா வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சித்தராமையா மனைவி பார்வதிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்தார். இதை எதிர்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வட மாவட்டங்களில் VCK கூட்டணியின்றி DMK வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு அக்கட்சி MP ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார். அவரது பேச்சு உண்மைக்கு மாறானது என்றும் அரசியல் ரீதியில் பக்குவமில்லாத பேச்சு எனவும் விமர்சித்தார். கொள்கை அடிப்படையிலேயே DMK வெற்றியை அணுக வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், 40 மக்களவைத் தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற DMKவும் முக்கிய காரணம் எனவும் கூறினார்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் அறிக்கையின் படி, உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில், 59.96 சதவீதத்துடன் கனடா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜப்பான் உள்ளது. இங்கு 52.68% பேர் படித்தவர்கள். லக்சம்பர்க் 3ஆவது இடத்தையும், தென்கொரியா 4, இஸ்ரேல் 5, அமெரிக்கா 6ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.
த்ரிஷாவின் மதில் சுவர் வழக்கை சென்னை HC முடித்து வைத்தது. மதில் சுவர் பிரச்னையில் பக்கத்து வீட்டாருடன் சமரசம் செய்து கொண்டதாக த்ரிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில் பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்வதாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக அவர் மனு தொடுத்திருந்தார்.
அழகிரி மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தொழில் அதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான இவர், கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையிலுள்ள ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாகக் கூறி, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, வேலூர் CMCஇல் மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆப்ரேட்டர் (லேப்) பணியிடங்களுக்கு B.Sc.(chemistry) பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேவையான தகுதியுடன் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் <
வருகிற 27ஆம் தேதி 4 படங்கள் ரிலீசாக உள்ளன. கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது. பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன் நடித்துள்ள ‘பேட்ட ராப்’, ஆக்சன் த்ரில்லர் படமான விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இவற்றில் நீங்கள் காண விரும்பும் படத்தை கமெண்ட் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.