India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்தி குறித்து அவதூறு பதிவிட்டவருக்கு நூதன நிபந்தனையுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. கல்யாண் சுந்தரம் என்ற இளைஞர் ஆபாச வார்த்தைகளுடன் காந்தியின் படத்தை Facebookஇல் பதிவிட்டதால், போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கில் அவர் ஜாமின் கோரிய நிலையில், மதுரை காந்தி மியூசிய நூலகத்தில் 15 நாள்கள் புத்தகத்தை அடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
சர்ச்சைக்கு மத்தியிலும் திருப்பதி லட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரம் பேசு பொருளானது. இதனிடையே கடந்த 4 நாள்களில் மட்டும் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்துள்ளதாகவும், இது சராசரியை விட அதிகம் என்றும் கூறியுள்ளது. மேலும், தங்கள் நிர்வாகம் மீது பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அஸ்வின் மட்டும் ENG அணியில் இருந்திருந்தால், அவரை ஓய்வு பெற செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுத்திருக்கும் என அந்த அணியின் முன்னாள் பவுலர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி, 38 வயதான அஸ்வினை ஓய்வு பெறச் செய்திருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். BAN எதிரான முதல் டெஸ்ட்டில் அஸ்வின் 6 விக்கெட்களை கைப்பற்றியதோடு, சதமும் விளாசியிருந்தார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. நாளை 30-40KM வேகத்தில் தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின்போது ஏமாறப்போவது யார் என்பது தெரியும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, அமைச்சரவையின் மாற்றம் துரைமுருகன் போன்ற மூத்தவர்களுக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என விமர்சித்தார்.
‘அமரன்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல் பாடல் “ஹே மின்னலே…” எனத் தலைப்பிடப்பட்ட காதல் பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக். 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் பிரசாத லட்டுகளுக்கு மத்தியில் ஏராளமான எலிக்குஞ்சுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்த நிலையில், புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் பிரசாதம் தொடர்ந்து சர்ச்சையாவது குறித்து உங்களது கருத்து என்ன?
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் அக்.2இல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில், ராணா, துஷாரா விஜயன், அமிதாப், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் பட்டையை கிளம்பும் நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டிரெய்லர் வெளியாக வாய்ப்புள்ளது. இப்படம் அக்.10இல் திரைக்கு வருகிறது.
இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய அதிபராக அனுர குமார திசநாயகே பொறுப்பேற்ற நிலையில், இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அமைச்சரவை செயலிழந்ததால், விரைவில் தேர்தல் நடத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இலங்கையில் 55 முதல் 66 நாள்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
Sorry, no posts matched your criteria.