India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செபி தலைவரை பாதுகாக்கும் திட்ட பின்னணியில் யார் உள்ளார்கள் என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். பொது கணக்கு குழு முன்பு ஆஜராகாமல் செபி தலைவர் மாதாபி புரி பூச் தவிர்த்தார். இதனால் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பொது கணக்கு குழு முன்பு ஆஜராகி பதிலளிக்க ஏன் மாதாபி தயங்குகிறார் என்று வினவியுள்ளார்.
தலைமைச் செயலக கட்டிடத்தில் விரிசல் ஏற்படவில்லை என்று தமிழக அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் முதல் தளத்தில் தரையில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசு, தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக தரையில் உள்ள ஓடுகள் மட்டுமே பெயர்ந்ததாக தெரிவித்துள்ளது. ஓடுகளுக்கு கீழுள்ள கான்கீரிட் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
ரயில் பயணத்தில் பயணிகள் நலன் கருதி சில பொருள்களை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன? 1) பட்டாசுகள், வெடிகுண்டுகள் 2) ஸ்டவ் மற்றும் கேஸ் சிலிண்டர் 3) ஆசிட், வாசனை திரவியங்கள் 4) தோள் பொருள் 5) எண்ணெய் மற்றும் க்ரீஸ் தடவப்பட்ட பொட்டலங்கள் ஆகும். இதை மீறி, ரயிலில் அந்தப் பொருள்களை எடுத்து வந்தால் ₹1,000 அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இன்று (அக். 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
“டானா” புயல் நிலவரம் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியுடன் PM மோடி நேற்று பேசினார். அப்போது அவரிடம், “டானா” புயலை எதிர்கொள்ள ஒடிசாவில் எடுக்கப்பட்டுள்ள தயார் நிலை நடவடிக்கைகள் குறித்து மோடி கேட்டறிந்தார். ஒடிசாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தரும் என்று உறுதியளித்த மோடி, புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் பாராட்டினார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையத்தால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, திருச்சியில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. SHARE IT.
திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர்கள் எச். ராஜா, தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த செல்வ பெருந்தகை, திமுக கூட்டணி நல்ல வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து பேச பாஜகவினருக்கு தகுதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
* விளக்க உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
SHARE IT.
பிரிக்ஸ் நாடுகள் தங்களிடையேயான வர்த்தகத்திற்கு பொது கரன்சியை உருவாக்க பரிசீலித்து வருகின்றன. அக்கரன்சியில், ஏசு, ஆர்தோடாக்ஸ் தேவாலயம், டிராகன், தாஜ்மஹால் ஆகியவை இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் தாஜ்மஹால் இடம்பெறுவதை விமர்சித்துள்ள இந்து அமைப்புகள், அசோக சக்ரா, சூரியனார் கோவில், லட்சுமியை இடம்பெற ஏன் முயற்சிக்கவில்லை என மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளன.
ONGCல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.25) கடைசி நாளாகும். அக்கவுண்ட் எக்ஸிகியூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 18-24 வயதுடையோர் www.ongcapprentices.ong.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.