India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனைவி ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக ஜெயம் ரவி போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கார், பொருட்களை மீட்டு தரவும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது அவரது வீடு எனவும், அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்றும் ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை ஜெயம் ரவியிடம் தெரிவித்த போலீசார், சட்ட ரீதியாக எதிர்கொள்ள அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
‘பிக் பாஸ்’ சீசன் 8 அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிலையில், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். VTV கணேஷ், நடிகர் ரஞ்சித், பப்லு, பூனம் பாஜ்வா, குரேஷி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. யாரெல்லாம் இந்த சீசனில் கலந்துகொள்வார்கள் என நினைக்கிறீர்கள்?.
செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்து வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி உடல்நலத்தை காரணம் காட்டியபோதும், அவருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. இவ்வழக்கை ஓராண்டுக்கு மேல் விசாரித்த நீதிபதி அல்லி, ஐகோர்ட் தலைமை பதிவாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் வழக்கை வேறொருவர் விசாரிக்க உள்ளார்.
சமீபத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் முன்னாள் PM ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவரது கட்சியை சேர்ந்த Ex MPயும், கிரிக்கெட் வீரருமான ஷகிப் அல் ஹசனும் கனடாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில், அவர் நாடு திரும்பினால் துன்புறுத்தப்பட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது. இதையடுத்து ஷகிப் விரைவில் நாடு திரும்புவார் என தெரிகிறது.
இலங்கை இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூர்யா, அவரது குடும்பத்தின் முதல் அரசியல்வாதியாவார். கொழும்புவில் பிறந்து வளர்ந்தவர். டெல்லி இந்து கல்லூரியில் பட்டம் பெற்றவர். கல்லூரி பேராசிரியர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர். 2015 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஹரிணியின் பிரச்சாரங்களில் பெண்களே நிரம்பிவழிவர். அவரது தந்தை தேயிலை தோட்டக்காரர்.
2025 ஐபிஎல் சீசனில் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி, வேறு அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், LSG கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலும், RCB அணிக்கு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. RCB கேப்டன் டூபிளசிஸை நீக்கிவிட்டு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேக்ஸ்வெல்லை கழட்டிவிட RCB முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் 2 வேலைகளை சரியாக செய்கிறார் என அதிமுக கிண்டல் அடித்துள்ளது. சென்னையில் பேட்டியளித்த அக்கட்சி அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், மீனவர் பிரச்னை, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் தமிழகத்தில் நிலவுவதாகவும், ஆனால் இதை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை, ஆனால் கருணாநிதி புகழ்பாடுவது, உதயநிதிக்கு பட்டம் சூட்டுதலை சரியாக செய்கிறார் என்று கிண்டல் அடித்தார்.
ஒடிஷாவில் ராணுவ வீரரை அடித்து, அவரது வருங்கால மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் தலையிட வேண்டும் என ராணுவத்தினர் கூற, குடி போதையில் வாகனம் ஓட்டி, மாணவர்களிடம் தகராறு செய்வதுதான் ராணுவ வீரரின் ஒழுக்கமா என போலீஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தனது இன்ஸ்டாவில், விரைவில் துபாயில் நடைபெறவுள்ள GT Racing போட்டியில் அஜித் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும்” அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் போர்ஷே GT3 RS ரக காரை அஜித் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டு விவகாரம் எதிரொலியாக உ.பியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் CCTV கேமராக்கள் பொருத்த அம்மாநில அரசு ஆணையிட்டுள்ளது. சமையல் செய்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறைகள் அணியவும் அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. போலீஸ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.