India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், மாநாட்டிற்கான ஏற்பாடு, தொண்டர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தவெக முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் அக்.27இல் நடைபெறுகிறது.
விஷ்ணு விஷால் கடந்த 2022ல் நடிக்க ஒப்பந்தமான ‘ஆர்யன்’ படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷ்ணு விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.CS இசையமைக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதன வன்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி மேலாண்மை முறையை DGFT டிச. 31 வரை நீட்டித்துள்ளது. அதன் அறிக்கையில், “2025 ஜனவரி முதல் இறக்குமதி செய்யவுள்ள நிறுவனங்கள் தங்களது இறக்குமதியின் அளவு & மதிப்பை அரசிடம் பதிவு செய்து, புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, அவற்றுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செப்.27 – அக்.2 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்.6 ஆம் தேதி வரை நீட்டிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறிய அமைச்சர் இன்று அறிவிப்பு வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
கோயில் யானைகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கக் கோரும் மனு மீது சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்காேரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மனு குறித்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்- வீராங்கனைகளுக்கு CM ஸ்டாலின் இன்று ஊக்கத் தொகை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு மொத்தம் ₹5 கோடிக்கான காசோலைகளை ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டாேர் கலந்து கொண்டனர்.
1) ஒரு மீட்டர் என்பது எத்தனை அடிக்கு சமம்? 2) நவீன எழுத்துக்கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 3) SEBI என்பதன் விரிவாக்கம் என்ன? 4) மயிலின் அறிவியல் பெயர் என்ன? 5) பண்டைய தமிழி எழுத்துக்களை ‘தமிழ் பிராமி’ என அழைத்த தமிழறிஞர் யார்? 6) ஆன்டிஜென்கள் இல்லாத ரத்த வகை எது? 7) பூவின் ஆண் & பெண் இனப்பெருக்க பகுதிகளின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
<<14189300>>வெள்ளி விலை<<>> ₹1 லட்சத்தைக் கடந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹98க்கும், 1 கிலோ வெள்ளி ₹98,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 1 கிராம் வெள்ளி ₹3 உயர்ந்து ₹101ஆக விற்பனையாகிறது. இதேபோல் 1 கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1 லட்சத்தைக் கடந்து, ₹1.01 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. 21ம் தேதி முதல் மாறாமல் இருந்த விலையில் இன்று மட்டும் ₹3,000 அதிகரித்துள்ளது. SHARE IT.
தங்கத்தின் விலையேற்றம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியும், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியும் அளித்துள்ளது. FED வங்கி வட்டி விகிதக் குறைப்பு, மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம், டாலர் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பாதுகாப்பு கருதி தங்கம் & ETFஇல் பலர் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இதன் விளைவாகவே கடந்த வாரத்தில் (10 கிராம் 24 c தங்கத்தின் விலை ₹77,020) அபரிமிதமாக உயர்ந்தது.
ராகுலை தேச துரோகி என விமர்சித்த H.ராஜாவின் நாக்கை வெட்டுபவருக்கு ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பெரம்பலூர் காங்., தலைவர் சுரேஷ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது பெரம்பலூர் மாவட்ட SP அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். பின்னர் பேசிய அவர், H.ராஜா மட்டுமின்றி ராகுலை மிரட்டிய சஞ்சய் கெய்க்வாட் நாக்கை வெட்டுபவருக்கு ₹1 கோடி வழங்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.