India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RSS-ன் தயவு இல்லாமல் பாஜகவால் தனித்து இயங்க முடியும் என ஜெ.பி.நட்டா சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இந்நிலையில், RSS மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் நட்டாவின் கருத்துக்கு தற்போது பதிலளித்துள்ளார். இது குடும்ப பிரச்னை எனவும், இது தங்களுக்குள்ளாகவே தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் தபேதார், மேயர் பிரியாவுக்கு டஃப் கொடுத்ததால் தூக்கியடிக்கப்பட்ட சம்பவம் சோஷியல் மீடியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. பிரியாவின் தபேதார் மாதவி (50) “லிப்ஸ்டிக்” பூசி பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் லிப்ஸ்டிக் போட்டு பணிக்கு வர வேண்டாம் என உத்தரவை மீறியதால், மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் சிங்காரச் சென்னையை சுழன்றடிக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்த பிரச்னையை விரைவாக தீர்க்க முதல்வர் ஸ்டாலினை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், விரைவான, இணக்கமான தீர்விற்கு மாநில அரசு தலையிட வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ படத்தின் 2வது பாடல் “ரா மச்சா மச்சா…” ப்ரோமோ வீடியோ வரும் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தேவையில்லாதது என்ற ஐகோர்ட்டின் பரிந்துரையை அரசு ஏற்றதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், வேறு வழக்குகள் நிலுவையில் இல்லையெனில், உடனடியாக அவரை பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, வறுத்து தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் வரகு அரிசியை போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அதனை மூழ்குமளவுக்கு பால் விட்டு வேகவிடவும். அதனுடன் சர்க்கரைப் பாகினை வடிகட்டி சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, இறக்கினால் சுவையான வரகரிசி பாயாசம் ரெடி.
ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம், உரிமை உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக இல்லாமல் திமுக கூட்டணி வட மாவட்டங்களில் வெல்ல முடியாது என ஆதவ் அர்ஜூனா பேட்டி அளித்தது விவாதப் பொருளானது. இது குறித்து பேசிய திருமாவளவன், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கருத்து இருந்தாலும், இறுதியில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும் என்றார்.
ஹிமாச்சலில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர் பெயர், முகவரி ஆகிய விவரங்களை காட்சிப்படுத்துமாறு அம்மாநில காங். அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்த 7 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உ.பி. அரசு உணவகங்களின் வேலையாட்கள் முகக்கவசம், கையுறை அணிவதை கட்டாயமாக்கியது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தான் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது என மனு பாக்கர் தெரிவித்துள்ளார். தன்னை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கங்களைக் காட்டச் சொன்னாலும், அதை பெருமையுடன் செய்வதாகக் கூறிய அவர், தனது அழகான பயணத்தை பகிர்ந்து கொள்ள இதுதான் வழி எனத் தெரிவித்துள்ளார். எங்கு சென்றாலும் பதக்கத்தை காட்டிக் கொண்டிருப்பதாக சிலர் விமர்சித்தது குறித்து அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் புகையிலைக்கு அடிமையாகாமல் இருக்க, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை விற்கப்படுவதை தடுத்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், குட்கா விற்பனை தொடர்பாக சட்டத்திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.