India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மது விற்பனையை குறைய விடாமல் பார்த்துக் கொள்வதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப் பொருளை பறிமுதல் செய்யும் போலீஸ், அதன் பின்னணியில் இருப்பவர்களை கைது செய்யாதது ஏன் என அவர் வினவியுள்ளார். மேலும், போதைப் பழக்கத்திற்கு எதிராக வீடியோ வெளியிடும் CM-க்கு, வீதியில் போராடும் தாய்மார்களின் குமுறல் கேட்கவில்லையா எனவும் கேட்டுள்ளார்.
ஒருவருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் (அ) தன் செயலால் அத்தகைய மரணம் ஏற்படுமென தெரிந்தே தெளிவுடன் தாக்குவது, அடிப்பது, துன்புறுத்துவது, சித்ரவதை செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது கொலை முயற்சி என வரையறுக்கப்படுகிறது. இது BNS பிரிவு 110-இன் படி குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் முதல் 7ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறை & அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
நடிகை அஞ்சு குரியன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நிவின் பாலி நடித்த ‘நேரம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் ‘சென்னை 2 சிங்கப்பூர்’, ‘ஜூலை காற்றில்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், ‘சிரிப்பும் காதலும் நிரம்பிய இந்தப் பயணம் ஒரு அதிசயம்தான்’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலில் இருபெரும் கழகங்களுக்கு மாற்றாக வரலாற்றை மாற்றி எழுதி புதிய சகாப்தம் படையுங்கள் என்று விஜய்க்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். மநீமவில் முக்கிய பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய அவர், தவெகவில் இணையவுள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், கமலின் அரசியலை விமர்சித்த அவர், விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு கூறியுள்ளார்.
24 மணி நேரத்திற்கு 64.5 mm – 115.5 mm வரை பெய்யும் மழைக்கு (காற்றின் வேகம் மணிக்கு 40 km) மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்படுகிறது. இதனை அடைமழை அல்லது கனமழை (Heavy Rainfall) என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். காற்று & இலகுவான இடியுடன் பொழியும் இம்மழையினால் சில சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இருப்பினும் இதனை எச்சரிக்கையாக மக்கள் எடுத்துக் கொள்ளலாம்.
மூளையின் நரம்புகளைப் பாதுகாக்கும் ஆற்றல் அமுக்கரா கிழங்கிற்கு இருப்பதாக Complementary & Alternative Medicine எனும் ஆய்விதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. விதாஃபெரின், சோம்னிஃபெரைன், விதானோலைட் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் கிழங்குப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர, பலவீனத்தால் ஏற்படும் நடுக்கம் மறையும், உடல் வலிமைப் பெறும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஜெயம் ரவியின் 34ஆவது படத்தை ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில், இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளுக்காக ‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமாரும் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களின் திரைக்கதை பணிகளிலும் இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தவெக சார்பில் விக்கிரவாண்டியில் பஞ்சர் கடை திறக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கட்சித் தொண்டர்கள் வரவுள்ள நிலையில், அவர்களின் வாகனம் பழுதானால் சரிசெய்ய கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பஞ்சர் கடை திறக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நாளை (அக்.27) இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் (34,774) இயங்கும். இதை பயன்படுத்தி, ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழக்கம்போல் பெற்றுக்கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள OPS, அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மூடுவிழா நடத்த திமுக அரசு முடிவு செய்துவிட்டதா? என வினவியுள்ளார். மேலும், அரசுப் பேருந்துகளை முழுமையாக இயக்கி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.