news

News October 27, 2024

நிறுவனங்கள் வரி செலுத்த அளித்த காலக்கெடு நீட்டிப்பு

image

கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நவ.15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய, அக்.31ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

News October 27, 2024

பொது அறிவு வினா – விடை

image

1)உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு எது? 2)MKS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? 4) ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் எது? 5) ஆன்ட்ரோபோபியா என்றால் என்ன? 6)எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது? 7) ஹாக்கியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
8)கண்கள் இருந்தும் பார்வையில்லாத உயிரினம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 27, 2024

Motor News: 92,000 கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா

image

இன்ஜினுக்கு பெட்ரோலை அனுப்பும் பியூயல் பம்ப் கோளாறின் காரணமாக 92,672 கார்களை திரும்பப் பெறப்போவதாக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேஸ், ப்ரியோ, BR-V, சிட்டி, ஜாஸ், WR-V கார்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன. இலவச மாற்றீடுகளை வழங்கும் நடைமுறைகள் நவ. 5, 2024 முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

தவெக மாநாட்டிலா இப்படி நடக்கணும்.. சோதனை

image

தவெக மாநாட்டையொட்டி விக்கிரவாண்டியே குலுங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த தம்பதியர் சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது விக்கிரவாண்டி தவெக மாநாடு நுழைவாயில் முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். திரும்பி வந்து பாரத்த போது, கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 லேப்டாப் மற்றும் ஹேண்ட்பேக்கை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

News October 27, 2024

இலங்கை கடற்படை அராஜகம்!

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் தமிழக மீனவர்கள் 12 பேர் ஒரு விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கைதான 12 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி தமிழக அரசும், மத்திய அரசும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், இலங்கை தனது போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.

News October 27, 2024

Recipe: சாமை கல்கண்டு பாத் செய்வது எப்படி?

image

சாமை அரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை நீரில் கழுவவும். பின் அதை வாணலியில் ஒன்றாக கொட்டி பொன்னிறமாக மாறும் வரை வறுத்து, சலித்து எடுக்கவும். பின் குக்கரில் போட்டு பாலூற்றி 5 விசில் வரை வேக விடவும். இந்த கலவையில் நெய் & பனங்கற்கண்டு பொடியை சேர்த்து கிளறவும். நன்கு கொதித்து, நீர் வற்றியதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான சாமை கல்கண்டு பாத் ரெடி.

News October 27, 2024

ரயிலில் இருந்து குதித்த தவெக தொண்டர் பலி!

image

சென்னையைச் சேர்ந்த தவெக தொண்டரான நிதிஷ் குமார், <<14464535>>தவெக மாநாட்டிற்காக<<>> தனது நண்பர்களுடன் ரயிலில் சென்றுள்ளார். இன்று அதிகாலை விக்கிரவாண்டி ரயில் நிலையத்தை ரயில் கடந்திருக்கிறது. அப்போது, விழுப்புரத்தில் இறங்கி மீண்டும் விக்கிரவாண்டிக்கு வருவதற்கு பதிலாக, இங்கேயே இறங்கிவிடலாம் என்ற ஆர்வமிகுதியில் அவர்கள் குதித்துள்ளனர். இதில் நிதிஷ் குமார் தவறி விழுந்து உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயமடைந்தனர்.

News October 27, 2024

விஜய் மாநாட்டில் மழை குறுக்கிடுமா?

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ள விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் மழை குறுக்கிட்டு விடுமோ என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், விழுப்புரத்திலிலும், விக்கிரவாண்டியிலும் இன்று வெப்ப வானிலையே நிலவும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

News October 27, 2024

தேமுதிகவின் முதல் மாநாடு உலக சாதனை: பிரேமலதா

image

தேமுதிகவின் முதல் மாநில மாநாடு உலக சாதனை படைத்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம் தெரிவித்தார். இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு என்று கூறிய அவர், உட்கார இடம் இல்லாமல் மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே லட்சோப லட்சம் தொண்டர்கள் குவிந்ததாக நினைவுகூர்ந்தார். மேலும், 2.5 லட்சம் பேருக்கு சேர் போடப்பட்ட நிலையில், 25 லட்சம் பேர் கலந்துக் கொண்டதாகவும் கூறினார்.

News October 27, 2024

இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் நாவல் தேநீர்

image

நீரிழிவு நோய்க்கு மூலக்காரணமான ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க செய்யும் ஆற்றலைக் கொண்டது நாவல் தேநீர். நாவல் இலை & விதையை இடித்து, மஞ்சள், வெந்தயம், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான நாவல் டீ ரெடி. இந்த டீ வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே குடிக்கலாமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

error: Content is protected !!