India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TVK மாநாட்டுக்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு 6 பேருடன் சென்ற கார், உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் TVK திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் கலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழில் குழந்தைகளுக்காக எழுதப்படும் சிறப்பு நூல்கள் மிகக் குறைவு. குறிப்பாக சிறாருக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நூல்கள் பெருமளவில் இல்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் சிறார்களுக்கான கதைகளை செந்தில் ஜெகன்நாதன் எழுதி வருகிறார். அவரது கதைகளை ‘கதைகளில் பேசும் குழந்தைகள்’ என்ற பெயரில் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் பிஞ்சுகளின் மனதில் நீதிநெறியை விதைக்கும் நூலாக வெளியிட்டுள்ளது.
உதயநிதிக்கு தான் கொடுக்கும் பொறுப்புகளை பயிற்சியாகப் பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், உதயநிதி ஒவ்வொரு டெஸ்டிலும் சென்டம் ஸ்கோர் செய்வதாகப் பாராட்டினார். மேலும், உலக புரட்சி வரலாற்றைப் பேசி வளர்ந்த இயக்கம் திமுக எனவும், பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் என்ற பெருமையை கொண்டிருப்பதாகவும் கூறினார்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சின்ன வெங்காயம், தக்காளி போட்டு தாளித்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இவற்றுடன் தனியே வேக வைத்த ஆட்டுக்குடல் துண்டுகள், மஞ்சள், உப்பு, பூண்டு, இஞ்சி, கசகசா போடவும். அதில் தேங்காய், ப.மிளகாய், முந்திரி ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்து ஊற்றவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான குடல் குழம்பு ரெடி.
*2008: ஈழத்தமிழர்களுக்காக கருப்பு சட்டை அணிந்து ரசிகர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார் விஜய். *2009: விஜய் மக்கள் இயக்கம் உருவானது. அதே ஆண்டில் புதுச்சேரியில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் தேவையான நேரத்தில் அரசியலுக்கு வருவதாக விஜய் பேசியிருந்தார். *2009: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து பேசினார். *2011: அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார்.
*2011: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. *2014: பிரதமர் வேட்பாளர் மோடியை சந்தித்து பேசினார். *2018: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் மூலம் நேரடி நிதியுதவி வழங்கப்பட்டது. *2024: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதாக பிப். 2ஆம் தேதி அறிவித்தார். பெரும் எதிர்பார்ப்புடன் தவெக முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.
தவெக மாநாட்டில் நடைபெறும் சம்பவங்கள் பார்ப்பவர்களை ஷாக் அடையச் செய்கிறதோ இல்லையோ, விஜய்யை அதிர செய்திருக்கும். நாற்காலிகளை உடைப்பதும், வாட்டர் கேன்களை வீசுவதுமாக கட்சியினர் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டிலேயே அமர்ந்து இளைஞர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ வைரலாகியுள்ளது. மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வர வேண்டாம் என விஜய் கூறிய நிலையில், மாநாட்டிலேயே மது அருந்துகிறார்கள் தொண்டர்கள்.
தவெக மாநாடு நடைபெறும் திடலில் செல்போன் சிக்னல் பாதிக்கப்பட்டுள்ளதால், குடும்பத்தினருக்கு தகவல் அளிக்க முடியாமல் அக்கட்சி தொண்டர்கள் அவதி அடைந்துள்ளனர். ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளதால், சிக்னல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி அப்பகுதியில் தற்காலிக டவர்கள் அமைக்கப்பட்டது. இருப்பினும், கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்துள்ளதால், அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நவ.26இல் சிறப்பு கூட்டுக்குழு கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் பார்லி. மைய மண்டபத்தில் லோக்சபா, ராஜ்யசபாவின் சிறப்பு கூட்டுக்குழு நடக்கவிருக்கிறது. அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்டதன் நினைவாக கொண்டாடப்பட்டு வந்த தேசிய சட்ட தினத்தை, 2015இல் அரசியலமைப்பு தினமாக பாஜக அரசு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு ‘பங்கேற்பு சான்றிதழ்’ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறும் தவெக மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தொண்டர்கள் திடலில் குவிந்துள்ளனர். அவர்களின் வருகையைப் பதிவு செய்யும் வகையில் QR Code வைக்கப்பட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்தால் சான்றிதழ் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.