India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று 10 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) தேனீ ஹம்மிங்பேர்ட் 2) Uniform Resource Locator 3) நிலக்கடலை (அ) வேர்க்கடலை 4) இறால் மீன் 5) குரோமோசோம் 6) ராபர்ட் ஓவன் 7) சோகர்னோ. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
கனரா வங்கியில் தொழில்பழகுநர் நிலையிலான 3,000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வேலையில் சேர விரும்புவோர் https://canarabank.com/ என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து ஆன்லைன் தேர்வு, மொழித்தேர்வு உள்ளிட்டவை நடத்தப்படும். இந்த வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு மட்டும் 350 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. SHARE IT.
இந்திய சந்தையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. அதாவது, தென் கொரியாவை தளமாக கொண்ட ஹூண்டாய், IPO மூலம் $3 பில்லியன் நிதியை திரட்ட SEBI ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மதிப்பு சுமார் $20 பில்லியனாக உயருமெனக் கூறப்படுகிறது. இந்த நிதியை அந்நிறுவனம் உற்பத்தி திறனை அதிகரிக்க & புது மாடல்களை அறிமுகப்படுத்த பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக பந்து வீசுவது கடினமானதென ஆஸி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “கடந்த முறை பார்டர் – கவாஸ்கர் கோப்பை போட்டியின்போது, ரோஹித் தொடக்க வீரராக களமிறங்கினார். அப்போது புதிய பந்துவீச்சை எதிர்கொண்ட அவர், பந்து வீச்சாளர்களால் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடினார். எக்ஸ்ட்ரா பவுன்ஸுக்கு அவர் கவலைப்படவில்லை” எனக் கூறினார்.
வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2 மாதத்திற்கு ஒருமுறை வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. எஞ்சிய பயன்பாட்டுக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிலர் முறைகேடு செய்வதால் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் 100 யூனிட் இலவசத்தை ரத்து செய்ய மின்வாரியம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உதயநிதிக்கு துணை CM பதவி அளிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு, புரட்டாசிக்கு பிறகு வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிடப்படி தேய்பிறை நாள் நடப்பதால் அறிவிப்பு வெளியாகவில்லை, தேய்பிறை முடிந்ததும் CM ஸ்டாலின் ஓகே சொன்ன அடுத்த நொடி அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு அமைச்சரவையில் முக்கிய துறையை அளிப்பது குறித்து ஆலோசனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்க் கவிதை உலகின் முன்னத்தி ஏராக இருக்கும் ஈரோடு தமிழன்பன், முகநூல் வழியாக எழுதிய கவிதைகளை ‘ஓடையின் முறையீடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். ‘ஆற்றை அழைத்துக் கொண்டு போனால் கடலாகலாம். காற்றை அழைத்துக்கொண்டு போனால் இசையாகலாம்’ என்பது போன்ற வரிகளை இந்த நூலில் படித்து ரசிக்கலாம். கவிதையின் ஊடாக இயற்கையை நேசிக்கும் வாசிப்பு பிரியர்களுக்கு இந்நூல் நிச்சயம் நல்ல அனுபவத்தை அளிக்கும்.
துலிப் கோப்பை தொடரில் கோலி மற்றும் ரோஹித்துக்கு சலுகை வழங்கியதற்கு முன்னாள் வீரர் மஞ்ரேக்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களும் துலிப் போட்டியில் விளையாடிய போது, இவர்களுக்கு மட்டும் சலுகை என்பது, மற்ற வீரர்களை அவமதிப்பதை போல் உள்ளதாகக் கூறியுள்ளார். இருவரும் துலிப் போட்டியில் விளையாடியிருந்தால், வங்கதேச அணியிடம் திணற வேண்டிய அவசியம் இருந்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் (RMC) எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. 28ம் தேதி கோவை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. SHARE IT
அறநிலையத்துறையா? வசூல்ராஜாவா? என இந்துசமய அறநிலையத்துறை பணிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் கோயில் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பணியை மட்டுமே அறநிலையத்துறை செய்கிறது. முறையாக பராமரிப்பு பணிகளை செய்வதில்லை என்று அதிருப்தியை வெளியிட்டனர்.
Sorry, no posts matched your criteria.