India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அவதூறு வழக்கில் கேள்விக்கு பதிலளிக்க அக்.18ல் நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40 அதிமுக MLAக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அவர் பேசியது குறித்து அதிமுக தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையில், சபாநாயகர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மந்திரி சபையை பங்கிட்டு கொள்வது மட்டும் ஆட்சி பகிர்வு இல்லை என CPM மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆட்சி, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கில் தான் அரசியல் கட்சிகள் செயல்படும் எனக் குறிப்பிட்ட அவர், இன்றைய சூழலில் நேரடியாக அதிகாரத்துக்கு வர முடியுமா? என வினவினார். முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள விசிக, அமைச்சரவையில் பங்கு கேட்பதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதிய வீரர்களை அணிக்கு கொண்டுவர இதுவே சரியான தருணம் என்றார். மேலும், தனது முடிவை BCB, தேர்வுக் குழு தலைவரிடமும் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, அக்டோபரில் SAக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
*தூங்கச் செல்லும் முன்பு இளஞ்சூட்டில் பசும்பால் அருந்தலாம்.
*ஆப்பிள், வாழை, மாதுளை (தேவையான அளவு) ஆகியவை கலந்த சாலட்டை ஒரு கப் சாப்பிடலாம்.
*நாள்தோறும் தூங்கும்முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
*தூங்கச் செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
*எளிதில் செரிமானம் ஆகாத தயிர், முட்டை, மாமிசம், சிப்ஸ், மஞ்சூரியன் போன்றவற்றை இரவில் உண்ணக் கூடாது.
தென்காசியில் கடந்த 2014-ம் ஆண்டு காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பொன்னுமணி, கண்ணன், முத்துகிருஷ்ணன், காளிராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பொன்னுமணி, கண்ணன், முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பாடகர் SPB பெயரில் சாலை என அறிவித்த CM ஸ்டாலினுக்கு நன்றி என இளையராஜா Xஇல் பதிவிட்டுள்ளார். அதில், தனது நண்பன் பாலுவின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலையின் பெயரை மாற்றியதற்காக தமிழக மக்கள், திரையுலகம் சார்பில் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலை, S.P.பாலசுப்பிரமணியன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ₹783, பகுதி திறன் உள்ளவர்களுக்கு ₹868, திறன் உடையவர்களுக்கு ₹954, திறன் மிகுதியானவர்களுக்கு ₹1,035ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய விகிதம் அக்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கட்டுமானம், தூய்மைப்பணி உள்ளிட்ட பலதுறை தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அவரை ED கைது செய்தது. நெஞ்சு வலி, பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகிய படலங்களை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொங்கு மண்டலத்தை தனது கைக்குள் வைத்திருந்த செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைவாசத்தை முடித்து வெளியே வந்திருக்கிறார்.
இவரை போல கணவர் கிடைக்குமா என இளம்பெண்களை ஏக்கம் கொள்ள செய்திருக்கிறார் துபாய் ஷேக் ஒருவர். துபாயில் பெண்கள் கவர்ச்சி உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது காதல் மனைவியை, பிகினி உடையில் பார்க்க ஆசைப்பட்ட ஜமால், தனித்தீவு ஒன்றையே ரூ.418 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தீவின் வீடியோவை அவரது மனைவி செளதி, பெருமையுடன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். என்னா மனுசன்!
அக்.27ம் தேதி நடைபெறும் தவெகவின் முதல் மாநாட்டில் பெண்கள்தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நிர்வாகிகளுடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நம்பிக்கை தெரிவித்தார். நம்முடைய இலக்கு 2026 தான் என்றும், விஜய் தான் முதலமைச்சர் எனவும் உறுதி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.