news

News September 28, 2024

மூலிகை: டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் நெருஞ்சில்

image

‘நெருஞ்சி நறும் வித்தை நினை’ எனும் அகத்தியரின் பாடல் நெருஞ்சில் மூலிகையின் ஆற்றலை எடுத்தியம்பி போற்றுகிறது. டையோசின், ஹெகோஜெனின், ஸாந்தோசைன், டையோஸ்ஜெனின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த அதன் செடியை நீரில் நன்கு அலசி, அரைத்து வெள்ளாட்டுப் பாலில் ஊற வைத்து, அதை காய்ச்சி, வடிகட்டி தேன் கலந்து 45 நாட்கள் குடித்துவந்தால் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு நீங்கும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News September 28, 2024

யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம்: பிரேமலதா

image

திரைப்படங்களில் கேப்டனின் பாடல், போஸ்டர்களைப் பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமையெல்லாம் கேட்க மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து என்றும் பெருமிதம் தெரிவித்தார். சண்முகப்பாண்டியன் நடிக்கும் படங்களிலும் கேப்டன் பாடல் இடம்பெறும் என்றார். ‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்தின், ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

News September 28, 2024

வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

image

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ரூ.500 மானிய விலையில் சமையல் சிலிண்டர், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000, மின்சாரம் 500 யூனிட் வரை இலவசம், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக். 5-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

News September 28, 2024

ஓலா திட்டம்: ஒரே நாளில் ‘ஹைப்பர் சர்வீஸ்’

image

சர்வீஸ் குறைபாடு தொடர்பாக எழுந்த பிரச்னைகளை சரிசெய்ய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ‘ஹைப்பர் சர்வீஸ்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை ஒரே நாளில் விரைவாகவும், முறையாகவும் வழங்குவதற்கான தனது சொந்த சேவை வலையமைப்பை விரிவாக்கவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1,000 புதிய மையங்களை திறப்பதுடன், ஒரு லட்சம் மெக்கானிக்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கவுள்ளது.

News September 28, 2024

Tata Motors ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

image

ராணிப்பேட்டையில் Tata Motors ஆலைக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பனப்பாக்கம் சிப்காட் பூங்காவில் 470 ஏக்கரில் ரூ 9,000 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைகிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலையால் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முகவரி என, விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

News September 28, 2024

கார் பந்தய அணியை தொடங்கிய அஜித்

image

‘அஜித் கார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார். இந்த அணியின் ரேஸிங் ஓட்டுநராக பெல்ஜியமைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் செயல்படுவார் என்றும் ஐரோப்பாவில் நடக்கும் 24H பந்தயத்தில் போர்ஷே 992 GD3 CUP பிரிவில் இவ்வணி பங்கேற்கும் எனவும் அஜித்தின் மேலாளர் கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்து அஜித் ரசிகர்களும், குறிப்பாக கார் ரேஸிங் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

News September 28, 2024

கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

image

காந்தி ஜெயந்தியையொட்டி, அக்.2ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கான உத்தரவில், ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.

News September 28, 2024

Recipe: முடக்கறுத்தான் அடை செய்வது எப்படி?

image

சின்ன வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, முடக்கற்றான் கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மல்லி சேர்த்து தாளித்து, நன்றாக வதக்கவும். பின்னர், இக்கலவையை தானிய மாவில் (ராகி, தினை, வரகு, சாமை) கலக்கவும். அதை சூடான தோசைக் கல்லின் மேல் தடிமனாக தட்டி, வேக வைத்து எடுத்தால், சுவையான ‘முடக்கறுத்தான் அடை’ ரெடி.

News September 28, 2024

கர்நாடக முதல்வருக்கு முற்றும் நெருக்கடி

image

கர்நாடக CM சித்தராமையா மீதான மூடா முறைகேடு வழக்கினை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி, அம்மாநில HC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்(மூடா) மூலம் சித்தராமையா, தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கியதாக புகார் எழுந்துள்ளது.

News September 28, 2024

நிர்மலா சீதாராமன் மீது FIR

image

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மக்களதிகார சங்கர்ஷ் பரிஷத் அமைப்பினர் அளித்த புகாரில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!