India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி, தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். மேலும், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு மற்றும் சாதி, மத, வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இன்றைய பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. எம்ஜிஆர், விஜயகாந்த் இருவரின் மேடைப் பேச்சுகளும் கூட அலங்காரங்கள் இன்றி, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் எளிமையான பேச்சுகளாக இருந்ததால் தான் மக்களை ஈர்த்தது. அதேபோல் விஜய்யின் பேச்சும் எளிமையாக இருப்பதாக பலரும் சோஷியல் மீடியாவில் குறிப்பிடுகின்றனர்.
நியூசி., அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசி., அணி 259 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இந்தியா 47.1 ஓவரில் ஆல் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசி., அணியில் கேப்டன் சோஃபி டெவின் 79, சுசி பேட்ஸ் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர்.
விஜய்யின் பேச்சு மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் பல மாற்றங்கள் நிகழலாம். குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக என இருந்த இருமுனை அரசியலுக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது. ஆம்!, 2026 இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி, இபிஎஸ் தலைமையில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, விஜய் தலைமையில் தவெக கூட்டணி, சீமானின் நாதக என்று ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளது.
எப்போதும் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை கடைசி பந்து முடியும் முன் போட்டி முடிந்துவிட்டதாக நினைப்பது தவறு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார். “T20 இறுதிப்போட்டியை நண்பர்களுடன் பார்ததுக்கொண்டிருந்தேன். இரண்டாவது பேட்டிங் நடக்கும்போதே போட்டி முடிந்துவிட்டதாக எனது நண்பர்கள் கூறினார்கள். ஆனால், நான் முழு போட்டியையும் பார்த்தேன். எனது கணிப்பே சரியாக இருந்தது” என கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் வந்திருந்தார். அவருக்கு வெயில் தாங்காமல் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்று அரசியல் காலத்தில் பேசு பொருளாகியுள்ள பிறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் பிஹார் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில், குறைவான பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும் பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3ஆவது இடங்களிலும் இருக்கின்றன. தமிழகத்தில் 1992-93ஆம் ஆண்டு வாக்கில் குழந்தை பிறப்பு விகிதம் 2.5% ஆக இருந்தது. அது 2019-21ஆம் ஆண்டுகளில் 1.8% ஆக குறைந்துள்ளது.
➤அருகம்புல், கஸ்தூரி மஞ்சள், மருதாணி வைத்து அரைத்துப் பூச தேமல் விரைவாகக் குணமாகும். ➤நாயுருவி இலை சாறை எடுத்து தடவி வந்தால் தேமல், படை குணமாகும். ➤கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்துவர தேமல் மறையும். ➤ 5 gm நன்னாரி வேரை 100 ml நீரில் நசுக்கி போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் தேமல் குறையும்.
விஜய்யின் இன்றய பேச்சில் அனல்பறந்தது. “என்கிட்ட இருக்கிறது எல்லாம் உண்மை, நேர்மை, உழைப்பு அவ்வளவு தான். இப்போ அரசியல் களத்துக்கு அழைச்சிட்டு வந்துட்டீங்க, இங்க எப்பவும் போல உழைப்பேன், ஓய்வில்லாம, அலட்டிக்காம, அசராம உழைப்பேன். அதற்கான ரிசல்ட் எல்லாமே உங்கள் விரலில் இருக்கும் போது எனக்கென்ன கவலை” என்றார் நம்பிக்கையுடன். நீங்க என்ன நினைக்கிறீர்கள்? கைத்தட்டல்கள் வாக்குகளாக மாறுமா?
2025 IPL-ல் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய தோனி, கிரிக்கெட்டில் தனது கடைசி ஆண்டுகளை மகிழ்ச்சியாக விளையாட நினைப்பதாக கூறியிருந்தார். இது பற்றி பேசிய CSK CEO காசி விஸ்வநாதன், இதை விட தங்களுக்கு வேறு என்ன வேண்டும் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நாளை (அ) வரும் 29ஆம் தேதி தோனியை சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.