India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும், நாளை கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் கணித்துள்ளது இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தேவரா’. இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள், அவரது கட் அவுட்டுக்கு ஆடுகளை வெட்டி ரத்தத்தில் அபிஷேகம் செய்தனர். இதுகுறித்து பேசிய தெலுங்கு நடிகை வேதிகா, “இது ஒரு பயங்கரம். ஒரு உயிரை பலியிட்டால்தான் அது கொண்டாட்டமா? ஆடு என்றால் உங்களுக்கு இளக்காரமா? ஒன்றுமறியா அந்த உயிருக்காக என் இதயம் துடிக்கிறது” என வேதனை தெரிவித்தார்.
IPLஇல் விளையாடும் வீரர்கள் சம்பளத்தை 2025 முதல் BCCI உயர்த்தியிருப்பதாக அதன் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில், வீரர்களுக்கான சம்பளம் ஒரு போட்டிக்கு ₹7.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஒரு சீசன் முழுவதும் விளையாடினால் ₹1.05 கோடியை கான்டிராக்ட் பணத்துடன் சேர்த்து பெறலாம். இதற்காக ஒவ்வொரு அணி நிர்வாகமும் ₹12.60 காேடி ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திருவையாறு சப்தஸ்தானத்தில் வேத தலமான திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில் அப்பரால் பாடப் பெற்ற தலமாகும். வேத நாயகரான பிரம்மன் ஈசனை பூஜித்து சாபம் நீங்கிய தலமாதலால் வேதிகுடி எனப் பெயர் பெற்ற இந்த திருத்தலத்திற்கு முதலாம் ஆதித்த சோழன் திருப்பணி செய்துள்ளார். இங்குள்ள வாழைமடுநாதர் – மங்கையர்க்கரசியை விரதமிருந்து அபிஷேகம் செய்து, விளக்கேற்றி வணங்கினால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் போலீசாரின் என்கவுன்ட்டர் நடவடிக்கை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் எல். முருகன், “யாரை வேண்டுமானாலும் போலீசார் சுடலாம் என்ற சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துவதுதான் போலீசாரின் வேலை. அவர்களை சுட்டுத் தள்ளுவது அல்ல. துப்பாக்கியால் சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது” எனக் கூறினார்.
நேபாள நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழையை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ODI போட்டியில், ஆஸி. வீரர் மிட்செல் ஸ்டார்க் படுமோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது போட்டியில் கடைசி ஓவரை (50 ஆவது ஓவர்) வீசிய அவர் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதிரடியாக பேட்டிங் செய்த ENG அணியின் லிவிங்ஸ்டன் 6,0,6,6,6,4 என ஸ்டார்க் ஓவரை வெளுத்தார். இதன் மூலம் ODI-யில் ஒரே ஓவரில் அதிக ரன் கொடுத்த ஆஸி.வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
வட மாநிலங்களில் பல ஆண்டுகளாக துணை முதல்வர் பதவி இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முதலாக 2009இல் தற்போதையை முதல்வர் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மேலும், அதிமுக ஒன்றிணைந்த பிறகு 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ் துணை முதல்வரானார். அதனை தொடர்ந்து தற்போது உதயநிதி அந்த பொறுப்புக்கு வந்துள்ளார். திமுகவில் இருவரும், அதிமுகவில் ஒருவரும் இதுவரை துணை முதல்வராக இருந்துள்ளனர்.
பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு சர்க்கரை சேர்க்காத சாக்லேட்டை சாப்பிடலாம். இது அவர்கள் உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் எப்போதும் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் சாக்லேட்டுகளை கையில் வைத்திருப்பது நல்லது.
அக்.1இல் ‘போட்’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சிம்பு தேவன் இயக்கிய அந்த படத்தில் யோகி பாபு நாயகனாகவும், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கவுரி ஜி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். “போட்” படம் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஒரு படகில் பயணிக்கும் 10 வித்தியாசமான குணாம்சம் கொண்ட மனிதர்களைப் பற்றியது ஆகும். இந்த படம் ஆக.2இல் தியேட்டரில் வெளியானது.
Sorry, no posts matched your criteria.