India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் நேரிட்டுள்ளது. இதில் காத்மாண்டில் 12 பேர், லலித்பூரில் 20, தாடிங்கில் 15 பேர் என இதுவரை 112 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 68 பேரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மஞ்சள், மல்லி, சீரகம், உப்பு, இஞ்சி பூண்டு விழுது இவற்றை பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். அதை கோழிக்கறி துண்டுகள் மீது தடவி, 30 நிமிடம் மேரினேட் செய்யவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு, விதை நீக்கிய காய்ந்த மிளகாய்களை தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், தேங்காய் நன்கு வேகும் வரை வதக்கவும். பின்னர் அதில் கோழிக் கறியை போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்தால் பள்ளிபாளையம் சிக்கன் ஃப்ரை ரெடி.
புரட்டாசி மாத தொடக்கத்தில் கறிக்கோழி விலை குறைந்த நிலையில், தற்போது சற்று அதிகரித்துள்ளது. கறிக்கோழி (உயிருடன்) ஒரு கிலோ ₹122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று அதன் விலை ரூ.125-ஆக இருந்தது. எனினும், சில்லறை விற்பனையில் கடந்த ஒரு வாரமாகவே ஒரே விலையில் தான் சிக்கன் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் ₹220 வரை விற்பனையாகிறது.
மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) காலியாக உள்ள 1,130 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.30) கடைசி நாளாகும். ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். +2 தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 23 வரை. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை. மேலும் விவரங்களுக்கு https://cisfrectt.cisf.gov.in/ என்ற லிங்கில் சென்று பார்க்கலாம்.
லட்டு குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்கவே, அவரிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் கார்த்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, அவரை எக்ஸ் பக்கத்தில் திரைப்பட ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். மெய்யழகன் படத்தின் ஆந்திரா ரிலீசுக்காக இப்படி போய் மன்னிப்புக் கேட்கலாமா? என ரசிகர்கள் திட்டித் தீர்க்கின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்தை நீங்கள் கீழே பதிவிடுங்கள்.
கொல்கத்தாவின் அடையாளமாக கடந்த 151 ஆண்டுகளாக (1873-2024) இயங்கிவரும் டிராம் சேவையை நிறுத்த மே.வங்க அரசு முடிவு செய்துள்ளது. இவற்றால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. திட்டமிடப்படாத நகர கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு பதிலாக நெரிசலுக்கு டிராம்களை மட்டும் குறை சொல்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி தமிழக அரசும், மத்திய அரசும் பல முறை இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், தனது போக்கை அது மாற்றிக் கொள்வதாக இல்லை. அந்த வகையில், இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான தக் லைஃப், பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்தாலும், த்ரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை விரைந்து முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
மத்திய அரசின் BIS நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 390 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். உதவி இயக்குநர், தனி செயலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. நாளை நள்ளிரவு வரை இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
பெங்களூருவில் நடந்த IPL நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முடிவில், IPL 2025 போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைக்க அனுமதிப்பது, வீரர்களை வாங்குவதற்கு மொத்தமாக ₹120 கோடி வரை (முன்னதாக ₹100 கோடி) செலவிட அணியை அனுமதிப்பது, இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.