news

News September 29, 2024

பேப்பர் ப்ளேட்களில் உணவுகளை சாப்பிடலாமா?

image

செய்தித்தாள்கள் மூலம் செய்யப்படும் ப்ளேட்களில் உணவுப் பொருட்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடப்படும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரிகளின் தாக்குதலும் குடற்புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கும், பாதுகாத்து வைப்பதற்கும் தாள்களை பயன்படுத்த வேண்டாமென FSSAI அறிவுறுத்தியுள்ளது.

News September 29, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) டேகோ மீட்டர் 2) கடல் கொண்ட தென் மதுரை 3) Hyper Text Markup Language 4) திபெத் 5) எலிபாஸ் மாக்சிமஸ் 6) ஆறு 7) Cu. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 29, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: வக்கீல் கிருஷ்ணன் நீக்கம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தேடப்படும் மொட்டை கிருஷ்ணன், வக்கீல் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். தலைமறைவாக உள்ள மொட்டை கிருஷ்ணன் குறித்து போலீஸ் அளித்த புகாரில், அவரை வக்கீல் பணியில் இருந்து அகில இந்திய பார்கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது.

News September 29, 2024

துணை முதல்வருக்கான அதிகாரங்கள் என்ன?

image

துணை முதல்வராக உதயநிதி இன்று பதவியேற்கிறார். இந்நிலையில், துணை முதல்வர் பதவி மற்றும் அவருக்கான அதிகாரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ‘துணை முதல்வர்’ என்ற பதவியே வரையறுக்கப்படவில்லை. கூட்டணி சமரசங்களுக்காக உருவாக்கப்பட்டதே இது. மற்றபடி, அப்பதவிக்கு அதிகாரங்கள் என தனியாக ஏதுமில்லை. கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்டவரே துணை முதல்வர்.

News September 29, 2024

மட்டன் எடுக்குறீங்களா.. இதை சேர்க்காதீங்க

image

மட்டன் பலவிதமான சத்துகளை உள்ளடக்கிய அற்புதமான உணவு. புரதம், கொழுப்பு, இரும்பு என உடலுக்கு தேவையான சத்துகள் மட்டனில் உள்ளன. ஆனாலும், மட்டன் சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் பால் மட்டும் எடுக்கக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரண்டிலும் புரோட்டீன்கள் உள்ளதால் கடுமையான செரிமானப் பிரச்சனை ஏற்படும். மேலும், லாக்டோஸ் இன்டோலரன்ஸ் ஏற்பட்டு Food Poison-ம் உருவாகும்.

News September 29, 2024

வானில் இன்று முதல் 2 நிலவுகள்

image

எரிகல் 2024 PT5 இன்று முதல் நவ. 25 வரை புவி சுற்று வட்டப்பாதைக்குள் வருகிறது. இந்த எரிகல்லானது, பூமியை போன்ற பாறைகளைக் கொண்ட அர்ஜூனா எரிகல் குடும்பத்தைச் சேர்ந்தது. இது புவி சுற்றுவட்ட பாதையில் இருக்கும் வரை வானில் 2 நிலவுகள் இருப்பது போல தெரியும். இதை வெறும் கண்ணால் பூமியில் இருந்து காண முடியாது. அதன் அளவு சிறிதாக இருப்பதும், பாேதிய வெளிச்சமின்மையுமே இதற்கு காரணமாகும்.

News September 29, 2024

BREAKING: பிரகாஷ் காரத்துக்கு CPM ஒருங்கிணைப்பாளர் பதவி

image

சிபிஎம் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அக்கட்சியின் இடைக்கால பொலிட் பீரோ ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாெதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அண்மையில் காலமானார். இதையடுத்து அப்பதவிக்கு மதுரையில் 2025 ஏப்ரலில் நடைபெறும் 24வது மாநாட்டில் புதியவரை தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது. அதுவரை காரத்தை, மத்திய கமிட்டி, பொலிட் பீரோ ஒருங்கிணைப்பாளராக சிபிஎம் நியமித்துள்ளது.

News September 29, 2024

BREAKING: 2 நாளைக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. நாளை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என கணித்துள்ளது. SHARE IT

News September 29, 2024

மூலிகை: கருந்திட்டுக்களை போக்கும் வெட்டிவேர்

image

மாசு அடைந்த நீரை இயற்கையாகக் குளிரூட்டி, சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளுள் வெட்டிவேர் முக்கியமானது. குஷிமோன், சைசனால், எபிசைசனால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதனை நீரில் ஊறவைத்தோ அல்லது பொடியாக்கி கலந்தோ குளித்து வந்தால், உடல் எரிச்சல், வியர்வை நாற்றம், தோல் அரிப்பு, வெப்பம் நோய்கள், தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் நீங்கும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News September 29, 2024

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: கெஜ்ரிவால்

image

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக முன்னாள் CM அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், டெல்லியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, காட்டாட்சி நடப்பதாகக் கூறியுள்ளார். டெல்லி சட்டம் ஒழுங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்கீழ் வருவதால், அவர் இதில் தலையிட்டு சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!