news

News September 29, 2024

இரவில் தனியாக சென்ற பெண் போலீஸ்.. நடந்தது என்ன?

image

உ.பியில் இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பை அறிந்துகொள்ள ACP சுகன்யா, மஃப்டியில் சென்றுள்ளார். அவசர எண்ணுக்கு போன் செய்து, இரவில் தனியாக செல்ல அச்சமாக இருப்பதாக கூறிய உடன், ரோந்து போலீசார் உடனே லைனுக்கு வந்துள்ளனர். முதல் சோதனை வெற்றியடைந்ததும், வாடகை ஆட்டோவில் ஏறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பாக எந்த வித அச்சத்தையும் ஏற்படுத்தாத ஓட்டுநர், சுகன்யாவை பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

News September 29, 2024

JOB ALERTS: ரயில்வேயில் 14,298 வேலைவாய்ப்புகள்

image

ரயில்வேயில் 14,298 காலி இடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் 40 பதவிகளில் 9,144 காலி இடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கையை 14,298 இடங்களாக ரயில்வே அதிகரித்துள்ளது. இதற்கு அக்.2 – 16 வரை rrbapply.gov.inஇல் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தால், எடிட் ஆப்சன் சென்று புதிதாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News September 29, 2024

செந்தில் பாலாஜியின் தியாகம் எப்படிப்பட்டது?: CM

image

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது X-பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியை தான் வாழ்த்தியதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனவும், அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டதாகவும் CM குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் அவரது தியாகம் என குறிப்பிட்டுள்ளார்.

News September 29, 2024

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

image

ரஷ்யாவில் நேற்று தொடங்கிய கினோபிராவோ திரைப்பட விழா, அக்.4 வரை நடைபெற உள்ளது. இதில் நாளை மற்றும் அக்.1ஆம் தேதி என அடுத்தடுத்து இரு தினங்கள் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இதன்மூலம், இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் மலையாளப் படம் என்ற பெருமையும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பெற்றுள்ளது. இப்படம் உலகளவில் ₹240 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

News September 29, 2024

துணை முதல்வர், புதிய அமைச்சர்களுக்கு CM வாழ்த்து

image

துணை முதல்வர், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். வாக்களித்த மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், அரசு என்பது கூட்டுப்பொறுப்பு என்றும், அமைச்சர்களின் கூட்டுச் சேர்க்கை தான் முதல்வராகிய நான் எனவும் நெகிழ்ந்தார். மேலும், துறை மாறுதல் செய்யப்பட்ட அமைச்சர்கள் புதிய துறையை கவனித்து பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

News September 29, 2024

3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.

News September 29, 2024

நாய்களின் உயிரை பறிக்கும் சாக்லேட்!

image

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரும்பாலானவர்களுக்கு சாக்லேட் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட சாக்லேட்டை நாய்கள் சாப்பிட்டால், அவற்றின் உயிருக்கே ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம். சாக்லேட்டுகளில் உள்ள மெதைல்சாந்தைன் அல்கலாய்டு தியோப்ரோமைன் என்ற வேதிப்பொருள், நாய்களின் இதயம், நரம்பு மண்டலம் மற்றும் சுவாசத்தை பாதித்து அவற்றின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

News September 29, 2024

இந்தியாவில் பணத்தை கொட்டும் FPI

image

USAவில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை 0.5% குறைத்த நிலையில், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPI) இந்திய முதலீடு அதிகரித்துள்ளது. அதாவது, செப்.27 வரை ₹57,359 கோடி அளவில் இந்திய பங்குச்சந்தையில் FPI முதலீடு செய்துள்ளனர். பத்திரங்கள் உள்ளிட்ட மொத்த முதலீடுகளை பொறுத்தமட்டில் ₹91,702 கோடிக்கு முதலீடுகளை குவித்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 29, 2024

பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காத 2 அமைச்சர்கள்

image

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர் பங்கேற்கவில்லை. தாயாருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மதுரை சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விமானம் தாமதம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம், அமைச்சர் சிவசங்கர் லண்டனில் உள்ளதால் நிகழ்ச்சியில் முடியவில்லை.

News September 29, 2024

WOW: இது நல்லா இருக்கே..!

image

குஜராத்தில் உள்ள சந்தங்கி கிராம மக்கள், வீடுகளில் உணவே சமைப்பதில்லை. இங்கு ஒரு பொது சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் அனைவருக்கும் சமையல் தயார் செய்யப்படுகிறது. மாதம் ₹2,000 கொடுத்து மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் சென்றுவிடுவதால், கிராமத்தில் முதியவர்கள்தான் அதிகம். எனவே, அவர்கள் சிரமப்படக் கூடாதென எடுத்த முடிவுதான் இது.

error: Content is protected !!