news

News April 14, 2025

EMMY விருது வென்ற நடிகை காலமானார்

image

EMMY விருது வென்ற பிரிட்டன் நடிகை ஜீன் மார்ஸ் (90) காலமானார். 1970களில் வெளியான அப்ஸ்டேர்ஸ், டவுன்ஸ்டேர்ஸ் சீரிஸ் மூலம் பிரபலமானவர் ஜீன்ஸ் மார்ஸ். லண்டனில் வசித்த அவர் ஞாபக மறதி நோயால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். ஈகிள் ஹேஸ் லேண்டட், ஹவுஸ் ஆப் எலியட் உள்ளிட்ட பல சீரிஸ்களில் நடித்துள்ள அவருக்கு, 1975இல் EMMY விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2025

டோல்கேட் இல்லை.. FASTag முறை ரத்து.. வரப்போகும் மாற்றம்!

image

டோல்கேட் வசூலில் மத்திய அரசு புதிய டெக்னாலஜியை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டோல்கேட்டோ FASTag முறையோ இனி இருக்காதாம். அனைவரும் ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்களுக்கு தயாராகிக் கொள்ள வேண்டும். பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுமாம். இதனால், அதிக கட்டணத்தை தவிர்க்கலாம். டோல்கேட்டில் காத்திருக்கும் சூழல் இருக்காது. சூப்பர்ல!

News April 14, 2025

மாதந்தோறும் ரூ.1,000 திட்டம்: கூடுதல் மாணவர்கள் சேர்ப்பு

image

NMMSS தேர்வு மூலம் 1 லட்சம் 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு வரை மத்திய அரசு ரூ.1,000 உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்தத் தேர்வில் இதுவரை தமிழகத்தில் இருந்து 5,890 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கையை 6, 695ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான ரிசல்ட் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. செக் பண்ணிக்கோங்க.

News April 14, 2025

பாமகவில் வெடித்த மோதல்

image

பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர் என்றும், கட்சியில் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஏதும் அறியாதவர் என்றும் விமர்சித்துள்ளார். அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு திலகபாமா என்றும் அவர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

News April 14, 2025

இரு துருவமாக பிரியும் பாமக நிர்வாகிகள்

image

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு அணியாக பிரியத் தொடங்கியுள்ளனர். அதன் உச்சமாக, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக திலகபாமா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வடிவேல் ராவணன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 14, 2025

தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி?

image

பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், அப்பாேது பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, அண்ணாமலை, அன்புமணி, சி.வி. சண்முகம், ஜி.கே. வாசன் ஆகியோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 14, 2025

4 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது.

News April 14, 2025

ஸ்ரீ விவகாரம்.. Beep போட்டு திட்டிய ‘மாநகரம்’ தயாரிப்பாளர்

image

முறையாக சம்பளம் கொடுக்காததால் நடிகர் ஸ்ரீ, மன அழுத்தத்திற்கு உள்ளாகி உடல் மெலிந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஸ்ரீயின் உடல்நலம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகவும், அவரை தொடர்பு கொள்ள நீண்ட நாள்களாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விஷயம் தெரியாமல் தன்னை திட்டுபவர்களை கெட்டவார்த்தையிலும் திட்டியுள்ளார்.

News April 14, 2025

மகளிர் உரிமைத் தொகை நாளை டெபாசிட்

image

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் ரூ.1,000 டெபாசிட் செய்து வருகிறது. இந்த மாதத்திற்கான ரூ.1,000 நாளை (ஏப்.15) பெண்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படவுள்ளது. இதற்கான SMS செல்போன் எண்ணுக்கு வந்ததும் பெண்கள், தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000 எடுத்து கொள்ளலாம். இந்தத் தகவலை பகிருங்கள்.

News April 14, 2025

அக்‌ஷர் படேலுக்கு ₹12 லட்சம் அபராதம்

image

MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில், ஓவர் வீச தாமதப்படுத்தியதால் DC கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. MI அதிரடியாக விளையாடியதால், ஃபீல்டிங் செட் செய்ய அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீச முடியவில்லை. இது அவருக்கு முதல்முறை என்பதால் ₹12 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு மீண்டும் நடந்தால் ₹24 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

error: Content is protected !!