India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL விரிவாக்கத்தை தாமதம் செய்யும் பிசிசிஐ முடிவால், ₹4,720 கோடி வரை இழப்பு ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. IPLஇல் கூடுதல் அணியை சேர்ப்பது, போட்டிகள் எண்ணிக்கையை 2023-27 காலகட்டத்தில் 94இல் இருந்து 74ஆக குறைப்பதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவதோடு, செலவு அதிகரித்து, வருமானம் குறையும் என IPL அணிகளின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இதில் 50 தொகுதிகளுக்கு முதல் 2 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இந்நிலையில், 40 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது. 3 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.
பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. கலந்தாய்வு அக். 14 முதல் 19 வரை நடைபெறுகிறது. அக். 23-இல் முதலாமாண்டு வகுப்பு தொடங்குகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்னவென்றே ராகுலுக்கு தெரியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், MSP குறித்து ராகுல் அடிக்கடி பேசுகிறார் என்றும், ஆனால் அதுகுறித்தோ, ராபி, காரீப் சாகுபடி குறித்தோ எதுவுமே அவருக்கு தெரியாது என்றும் கூறினார். ராகுல் மீதான அமித்ஷாவின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
➤பெரு ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணி (1,725) தங்கப்பதக்கத்தை வென்றது. ➤சீன ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஸ்பெயின் வீரர் அல்காரஸ் தகுதி பெற்றார். ➤பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வாளர் பொறுப்பை முகமது யூசுப் ராஜினாமா செய்தார். ➤பெர்கெலே ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ருடுஜா போசாலே ஜோடி முன்னேறியது.
எச்.வினோத் இயக்கவுள்ள விஜய்யின் 69ஆவது படம் கமர்ஷியல் கலந்த அரசியல் படமாக உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் விஜய்யின் கட்சி கொடி பயன்படுத்தப்படும் எனவும் அவரது அரசியல் கொள்கைகள் பற்றி பேசப்படும் என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் 27ஆம் தேதியில் விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாநாடு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமெனக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பாதாள சாக்கடைகள், செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வதில், 92% பேர் SC, ST, OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள விவரப்படி, SC சமூகத்தினர் 68.9%, ST சமூகத்தினர் 8.3%, OBC சமூகத்தினர் 14.7%, பொதுப்பிரிவினர் 8% பேர் இந்த வேலைகளை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. அதில், நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. SHARE IT
தீவிரவாதிகள் மரணத்திற்கு கண்ணீர் வடிப்பது, அவர்களை தியாகிகள் எனக் கூறுவது தான் மெகபூபா முப்தியின் வேலை என பாஜக விமர்சித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொலைக்காக வருந்தி, J&Kவில் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக மெகபூபா Xஇல் பதிவிட்டிருந்தார். இதனை கண்டித்த பாஜக, INDIA கூட்டணிக்கு நாடு முக்கியமில்லை. PAK, BANஇல் இந்துக்கள் கொல்லப்பட்டபோது அவர்கள் அமைதி காத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா, வங்கதேசம் இடையே 2ஆவது டெஸ்ட் போட்டி நடக்கும் கான்பூர் மைதானத்தில் லாங்கர் குரங்குகளை உ.பி. கிரிக்கெட் சங்கம் களமிறக்கியுள்ளது. அந்த மைதானத்தில் சுற்றித்திரியும் குரங்குகள், போட்டியை காண வரும் ரசிகர்கள், நேரலை செய்யும் தொலைக்காட்சி கேமராமேன்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. இதையடுத்து குரங்குகளை அச்சுறுத்தி விரட்ட லாங்கர் குரங்குகளை உ.பி. கிரிக்கெட் சங்கம் களமிறக்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.