India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாதா சாகேப் பால்கே விருது பெறும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு, PM மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில், ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து அவருக்கு மதிப்புமிக்க விருது வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மிதுன் ஒரு கலாசார சின்னம், அவரது பல்துறை நடிப்பிற்காக தலைமுறைகள் கடந்தும் போற்றப்படுகிறார் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து தற்போது சென்செக்ஸ் 85,556 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 280 சரிந்து 25,896 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் சரிவுடன் வர்த்தமாகின்றன.
நாளை (அக்டோபர் 1) முதல் பிஎஃப் கணக்கு தொடர்பான 3 புதிய முக்கிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. அதை தெரிந்து கொள்வோம். 1) என்ஆர்ஐ யாரேனும் பிஎஃப் கணக்கில் தகவலை அப்டேட் செய்யாமல் இருந்தால், அதற்கு நாளை முதல் வட்டி செலுத்தப்படாது. 2) பிஎஃப் கணக்கு ஒன்றுக்கும் மேல் இருப்பின், நாளை முதல் மெயின் கணக்கிற்கே வட்டி வரவு வைக்கப்படும். 3) 18 வயதுக்கு மேற்பட்டோர் கணக்கிலேயே வட்டி வரவு வைக்கப்படும்.
நேபாளத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 192ஆக அதிகரித்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளமும், நிலச்சரிவும் நேரிட்டுள்ளது. இதில் சிக்கி நேற்று வரை 170 பேர் பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. மேலும் பலரை காணாததால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த திரைமறைவில் பாஜக கூட்டம் நடத்துவதாக சிவசேனா கட்சி UBT தலைவர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டி உள்ளார். நாக்பூரில் பேசிய அவர், “சரத்பவாரையும், என்னையும் அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்த கூட்டம் நடத்தி, அமித்ஷா திட்டம் தீட்டுகின்றார். அப்போதுதான் பாஜகவினரால் மகாராஷ்டிராவை எளிதாக கொள்ளையடிக்க முடியும். இதற்கு RSS தலைவர் மோகன் பகவத் உடன்படுவது ஆச்சரியம் அளிக்கிறது” என்றார்.
போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,82,375 பேரின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய தமிழக காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. டிஜிபி அலுவலக செய்தி குறிப்பில், ஜூலை வரை விதிகளை மீறியதாக 76,15,713 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், லைசென்ஸ்களை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 39,924 லைசென்சுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் அவர் பேசுகையில், “மழையால் ஏற்படக்கூடிய எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்பதை நோக்கமாக கொண்டு அனைத்து அதிகாரிகளும் செயல்பட வேண்டும்” என உத்தரவிட்டார்.
மத்திய தொழிலக பாதுகாப்புப் >படையில் (CISF) காலியாக உள்ள 1,130 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். +2 தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 23 வரை. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை. மேலும் விவரங்களுக்கு https://cisfrectt.cisf.gov.in/ என்ற லிங்கில் சென்று பார்க்கலாம்.
விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. யானை சின்னத்தை பயன்படுத்த தடைகோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம், கட்சிக் கொடி விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது.
மத்திய அரசின் என்.சி.எஸ்.எம். ஆணையத்தில் நிரப்பப்படவுள்ள Technician-A, Office Assistant Gr.III பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. பணியில் சேர தகுதி உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: 10,+2, ITI, Diploma. வயது வரம்பு: 18-35. சம்பளம்: ₹19,300 – ₹63,200. விண்ணப்பக் கட்டணம்: ₹885. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Sorry, no posts matched your criteria.