India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மற்றொரு வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்கக் கோரும் மனுவை, சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. அப்போது, தமிழக அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்க உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கும் அவர்கள் அறிவுறுத்தினர்.
‘மெய்யழகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த ஆதரவு குறித்து கார்த்தி நெகிழ்ச்சியுடன் எழுதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மெய்யழகன் படத்தின் கதையை படித்தபோது, என் மனம் அன்பால் நிறைந்தது. அதே அன்பை நீங்களும் உணர வேண்டும் என விரும்பினேன். இது உங்களுக்கு புதிதாக இருக்கும் என்பது தெரியும். என் மீதும், படத்தின் மீதும் அன்பை பொழிந்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்தியா இன்று புதிய உலக சாதனை படைத்தது. கான்பூரில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஜெய்ஸ்வால், ரோஹித் ருத்ரதாண்டவம் ஆடினர். இதனால் முதல் 3 ஓவர்களில் 51 ரன்களை அதிரடியாக குவித்தது. இதற்கு முன்பு இங்கி. 4.2 ஓவர்களில் 50 ரன்களை விளாசியதே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணி இன்று புதிய வரலாறு படைத்தது.
ஆட்சியில் இருந்து மோடியை அகற்றாமல் நான் சாக மாட்டேன் என மல்லிகார்ஜுன கார்கே நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அமித் ஷா, கார்கே பேசிய பேச்சுக்கு காங்கிரஸார் வெட்கி தலைக்குனிய வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், தனது உடல்நலன் சார்ந்த பிரச்னைக்கு மோடியை அவர் தேவையில்லாமல் வம்பிழுத்துள்ளார். மோடி மீது காங்கிரஸாருக்கு உள்ள பயத்தையும், வெறுப்பையுமே இது வெளிப்படுத்துகிறது” என்றார்.
டிராய் உத்தரவு எதிராெலியாக வங்கிகளிடம் இருந்து அனுப்பப்படும் SMS நாளை முதல் வராது பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மோசடியை தடுக்க URLs, APKs உள்ள SMS-கள் செல்வதை தடுக்கும்படி டிராய் உத்தரவிட்டிருந்தது. மேலும், செல்பேசி நிறுவனங்களிடம் பதிவு செய்ய வங்கிகளுக்கு இன்றுவரை அவகாசம் அளித்தது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவதால், நாளை முதல் SMS வராது பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இன்று 10 மணிக்கு <<14230544>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பின்லாந்து 2) Personal Identification Number 3) திருமூலர் 4) ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 5) Au 6) பாசில் மரம் & பிளம் மலர் 7) ஈசல்கள். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
சிலருக்கு எப்போதுமே உடலிலும், முதுகிலும் வலி இருக்கும். அவர்களுக்கான டிப்ஸ்: ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி காய வையுங்கள். பின்னர் அதில் இரண்டு கைப்பிடி முருங்கை இலைகளை போடுங்கள். 10 சின்ன வெங்காயம், 8 பூண்டு, சிறு துண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மஞ்சள், 3 கிராம்பு ஆகியவற்றை போட்டு 25 நிமிடம் கழித்து எடுத்து வடிகட்டி குடியுங்கள். தேவையில்லாத வாயுக்கள் வெளியேறி வலி மறைந்துவிடும்.
இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் ஈட்டிய உபரி லாபத்தில் தொழிலாளர்களுக்கும் குறிப்பிட்ட பங்கினை வழங்குவதற்கான மீதூதியம் வழங்கும் சட்டம் (Payment of Bonus Act)1965இல் கொண்டு வரப்பட்டது. 20 (அ) அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் (நிரந்தர) பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினால் குறைந்தபட்சம் 8.3% போனஸ், லாபத்தில் இயங்கினால் அதிகபட்சம் 20% போனஸ் வழங்க வேண்டும்.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடிவடையாத போது, எதற்காக பொதுவெளியில் இந்த விஷயத்தை கூறினீர்கள்? மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என தெரிவித்தது.
2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஷில் 233 ரன்களில் வங்கதேசம் ஆல் அவுட் ஆனது. கான்பூரில் நடைபெறும் இப்போட்டி, மழை காரணமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டது. எனினும் இன்று காலை போட்டி தொடர்ந்து நடந்தது. மொமினுல் ஹக் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முகம்மது சிராஜ், அஸ்வின், ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sorry, no posts matched your criteria.