India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில், ரேஷன்கடைகளில் சிறு ATM சேவையை ஏற்படுத்த தமிழ்நாடு கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் ரூ.1,000 – ரூ.2,000 வரை ரேஷன் கடைகளிலேயே பணம் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கென வங்கி ஊழியர் ஒருவர் பணியமர்த்தப்படுவார். ATM வசதி இல்லாத (அ) பயன்படுத்த தெரியாத முதியோர் இதனால் பயனடைவர். இதில் பயோமெட்ரிக் முறையில் இயங்கக்கூடிய டிஜிட்டல் கருவி கோர் பேங்கிங் சேவைகளை வழங்கும்.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸை Declare செய்துள்ளது. BAN அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து BAN அணி தற்போது 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கி உள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ’வேட்டையன்’ படத்தின் ட்ரெய்லர் வரும் அக். 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின் டீசர் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் டீசர் ரஜினியின் முந்தைய படங்களான ‘தர்பார்’, ’அண்ணாத்த’ போல் உள்ளதாக விமர்சனம் எழுந்த நிலையில் ட்ரெய்லர் அதற்கு பதிலடியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த அவருக்கு ஜாமின் கிடைத்ததால், சிறையில் இருந்து வெளியே வந்தார். தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரின் வழக்கை மற்றொரு அமர்வு நீதிபதியிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டுக்கு SC உத்தரவிட்டுள்ளது.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பிறரை வசீகரிக்கும் அன்பு மனமும் இரக்க குணமும் கொண்டவர்களாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல துறைகள் சம்பந்தப்பட்ட நூல்களைப் படிப்பதில் ஆர்வம், இயற்கையான அழகு, தன்னடக்கம், நேர்மை, மன உறுதி, ஒழுக்கம் உடையவர்களாக இருப்பீர்கள் என்று நந்தி வாக்கியம் உங்களைப் பற்றிக் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
போரில் இதுவரை 6.51 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய இப்போரில் பலி குறித்து உக்ரைன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 6.51 லட்சம் வீரர்கள், 369 விமானங்கள், 28 கப்பல்கள், 1 நீர்மூழ்கி, 328 ஹெலிகாப்டர்கள், 16,000 ட்ரோன்களை ரஷ்யா இழந்துள்ளதாக கூறியுள்ளது. ஆனால், உக்ரைன் தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும்
தெரிவிக்கவில்லை.
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்தியா இன்று மேலும் ஒரு உலக சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் 10.1 ஒவர்களில் இந்தியா 100 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 2023ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 12.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தே முந்தைய உலக சாதனையாக இருந்தது. இதை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.
தன்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என திமுகவினரை அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். நேற்று முதல் நீங்கள் காட்டும் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஓப்பனராக களமிறங்கிய அவர் எதிர்கொண்ட முதல் 2 பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அசத்தினார். இதன்மூலம் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த பட்டியலில் உள்ள 4 வீரர்களில் 3 பேர் இந்தியர்கள். ஃபோஃபி வில்லியம்ஸ், சச்சின், உமேஷ் யாதவ், ரோஹித் உள்ளனர்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் அரசியல் கலக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவி செய்யாது. விட்டுக் கொடுத்துப் போவது தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். இரு மாநில விவசாயிகளும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். மழைக்கு வருண பகவான் அருள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.