India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தனின் நடிப்பில் கடந்த மே.31ஆம் தேதி வெளியான ’கருடன்’ திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழில் வெளியான இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட உள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அமைச்சரவையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு மூன்றாவது இடம் வழங்கப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலிடத்தில் மு.க.ஸ்டாலின், 2ஆவது இடத்தில் துரைமுருகன், 3ஆவது இடத்தில் உதயநிதி மற்றும் 19ஆவது இடத்தில் புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற ஆர்.ராஜேந்திரன், 21ஆவது இடத்தில் செந்தில் பாலாஜி, 27ஆவது இடத்தில் கோவி.செழியன், 29ஆவது இடத்தில் நாசர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கார்த்தி நடிப்பில் ’மெய்யழகன்’ திரைப்படம் செப்.27ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கதை நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் மற்றும் கார்த்தி – அரவிந்த்சாமி இடையான நீண்ட உரையாடல் சற்று தொய்வு ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது. படத்தின் 18 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. இதையடுத்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய படத்தை இன்று முதல் திரையரங்குகளில் காணலாம்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். சச்சின் 623 இன்னிங்ஸில் 27 ஆயிரம் ரன்கள் எடுத்த நிலையில், தற்போது விராட் கோலி வெறும் 594 இன்னிங்ஸில் 27,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இதேபோன்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், சச்சின், கவாஸ்கரை தொடர்ந்து 9,000 ரன்களைக் கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சித்தராமையாவின் மனைவிக்கு 14 மனைகள் முறைகேடாக நிலம் ஒதுக்கியதால், கர்நாடக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கை ED தற்போது பதிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு விசாரணைக்கு கர்நாடக ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தேர்தல் பத்திர விவகாரத்தில் மிரட்டி பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணைக்கு அக்.22ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டு (2022-23) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15.66% தமிழ்நாட்டில் இருக்கிறது. இதில், சுமார் 1.85 கோடி பணியாற்றுகின்றனர். குறிப்பாக தொழிலாளர்கள் வாகன உற்பத்தி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு, வேதிப்பொருள்கள் உற்பத்தியில் அதிகளவில் பணிபுரிகின்றனர்.
கான்பூரில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. BAN அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 9 விக்கெட் இழப்பிற்கு
285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாடிய BAN அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.
ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என ஆர்த்தி இன்ஸ்டாவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில், தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்றேன்; ஆனால், விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. இருப்பினும் சட்டரீதியாக தனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மேலும், வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிடவும், தமிழ் – ஆங்கில நாளிதழில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிடவும் ஆணையிட்டு, பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் பணியாற்றலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.