India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*ஆசிய யூத் கேம்ஸில் 13 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் இந்தியா 6-வது இடம். *தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா A 234 ரன்களுக்கு ஆல் அவுட். *ஹைலோ ஓபன் ஆடவர் காலிறுதியில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி தோல்வி. *மகளிர் பிரிவில் உன்னதி ஹூடா அரையிறுதிக்கு முன்னேற்றம். *வங்கதேசத்திற்கு எதிரான 3-வது டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

கணினியில், பல செயல்களை மவுஸ்‑கிளிக்குகள் இல்லாமல், ஷார்ட்கட் மூலம் செய்யலாம். இவை, நமது வேலையை சுறுசுறுப்பாக செய்ய உதவும். ஷார்ட்கட் மூலம் ஒரு செயல்பாட்டை, எளிதாக செய்து முடிக்கலாம். மவுஸில் இருக்கும் கையை மட்டுமே நகர்த்திக் கொண்டிருந்தால், சலிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த சலிப்பை தவிர்க்க உதவும் சில ஷார்ட்கட்டுகளை, மேலே உள்ள போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

இரும்பு மங்கை, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை படைத்த இந்திரா காந்தி 1984ம் ஆண்டு இதே தினத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 முறை பிரதமர், அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர், எமர்ஜென்சியை அமல்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கினார். இந்திராவை கொண்டாட ஆயிரம் காரணங்கள் உள்ளன. என்றாலும், எமர்ஜென்சி இன்றும் அவரது அரசியல் அத்தியாயத்தின் கரும்புள்ளியாகவே உள்ளது.

நவ.2-ம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு இடம் பெயரவுள்ளதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *துலாம்: தொழிலில் பிரகாசமான முன்னேற்றம். தடைபட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். *தனுசு: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். *மகரம்: வேலையில் ஊதிய உயர்வு. வியாபாரம் செழிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

GBU படத்திற்கு பிறகு, அஜித்தின் புதிய படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் அறிவிப்பை அஜித் வெளியிட்டுள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தனது அடுத்த பட அறிவிப்பு 2026 ஜனவரியில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். திரை பயணத்தில் அனைத்து சவால்களையும் கடந்து வந்திருப்பதாகவும் அஜித் உருக்கமாக பேசியுள்ளார்.

போலந்து நாட்டில் உள்ள சுவோசோவா என்று ஊரில், 6 ஆயிரம் குடும்பங்கள் ஒரே தெருவில் வசிக்கின்றனர். இந்த தெரு சுமார் 9 கி.மீ தூரம் கொண்டது. ‘ஒரே தெரு’ என்ற வடிவமைப்பில் இந்த ஊர் பிரபலமாகி உள்ளது. இதன் தனித்துவமான வடிவமைப்பு, இயற்கை சூழல், விவசாயத்துடன் இணைந்த வாழ்க்கை மூலம் அழகான சிறிய ஊர் என்பதைக் காட்டுகிறது. இதன் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

அமித்ஷாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அதிமுகவை பற்றி பேசாமல் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். OPS, TTV, KAS இணைப்பானது அதுவாக நடந்ததாகவும், அதற்கு தான் பொறுப்பில்லை என்ற போதிலும் தன்னைக் காரணமாக குறிப்பிடுகின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார். அதிமுக தலைவர்கள் தன்னை இன்றும் திட்டிக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் குறித்து திரும்ப பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் கூட ஆகாது என்றும் வினவியுள்ளார்.

நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் ரீசார்ஜில் 5% தள்ளுபடி வழங்கும் பிளானை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ₹485 திட்டம் இனி ₹460-க்கு கிடைக்கும். இதில், 72 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் கால், தினமும் 100 SMS ஆகியவற்றை பெறலாம். இதேபோல், ₹1,999 ரிசார்ஜ் பிளானிலும் ₹100 தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

கலப்பட டீ தூள் பயன்படுத்தினால், உடலுக்கு தீங்கு உண்டாகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், டீ குடிக்க பயன்படுத்தும் தூள் நல்லதா என தெரிந்து கொள்ளுங்கள். *தண்ணீரில் டீ தூள் போட்டு சிறிது நேரத்திற்கு அப்படியே விடுங்கள், அதன் நிறம் மாறவில்லை எனில் அது ஒரிஜினல். *வெள்ளை நிற பேப்பரில் டீ தூள் போட்டு அதில் 2 சொட்டு தண்ணீர் ஊற்றவும், பேப்பரின் நிறம் மாறினால் அது போலி டீ தூள் ஆகும்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து EX வீரர் நாசர் ஹூசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்த போது ஜெமிமாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட நாசர் ஹூசைன், அவருக்கு சில பந்துகளை வீசியதாக கூறியுள்ளார். அவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் ஸ்டாராக உருவெடுப்பார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே தற்போது நடந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.