India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதால் தான் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியதாக திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம் என கேட்ட அவர், EPS பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி CM <<17460200>>ரேகா குப்தாவை<<>> அறைந்த ராஜேஷ் சகாரியா, விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார். CM ரேகா குப்தாவை கத்தியால் குத்த திட்டமிட்டதாகவும், ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக கத்தியை வீசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தெருநாய்களை அகற்றுவதற்கு எதிரான தனது கோரிக்கையை CM ரேகா குப்தா நிராகரித்ததன் காரணமாகவே தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் (வேப்பூர் அருகில்) ஜனவரி 9-ம் தேதி தேமுதிக ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O’ நடைபெறும் என்று விஜயகாந்த் பிறந்தநாளான இன்று பிரேமலதா அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி, தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த மாநாட்டில் தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வுலகில் 8.2 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2022-ம் ஆண்டு வரை சுமார் 700 மில்லியன் மக்கள் பசியில் வாடியதாக தரவுகள் சொல்கிறது. ஆனால், அடுத்த 15 ஆண்டுகளில், அதாவது 2040-க்குள் இதன் எண்ணிக்கை 1.1 பில்லியனாக உயரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு, பிளாஸ்டிக் பயன்பாடும், அதன் கழிவுகளும் மண்ணை நாசம் செய்வதே காரணம் எனவும், அது அரிசி, கோதுமை விளைச்சலை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர், CM ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தனர். கவின் படுகொலை செய்யப்பட்டபோது CM இரங்கல் தெரிவிக்காததும், தூத்துக்குடிக்கு சென்றபோது நேரில் செல்லாமல் போன் மூலம் ஆறுதல் கூறியதும் சர்ச்சையானது. இந்நிலையில், முதல்வரை சந்தித்த கவின் பெற்றோர், தனது மகனின் கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 2023 முதல் ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்த Dream 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட்டதாக BCCI தெரிவித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளது. எனவே, புதிய ஸ்பான்சரை தேடும் முயற்சியில் BCCI இறங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணங்களுக்காக தனிப்பட்ட ஏற்பாடுகள் இல்லை என சாடிய அவர், காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் 24 மணிநேரமும் திறந்தே இருக்கும் என்றார். சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
லால் சலாம், வேட்டையன், கூலி ஆகிய படங்களுக்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால், அடுத்த படத்தின் கதை தேர்வில் ரஜினி தீவிர கவனம் செலுத்துகிறாராம். இந்நிலையில் மகாநதி (நடிகையர் திலகம்), கல்கி 2898 ஆகிய படங்களின் இயக்குநர் நாக் அஷ்வின், ரஜினியிடம் கதை சொல்லியுள்ளாராம். இது அவருக்கு பிடித்துபோக, கதையை டெவலப் செய்ய சொல்லியுள்ளாராம். எனவே ரஜினியின் அடுத்த படத்தை நாக் அஷ்வின் இயக்குவார் என கூறப்படுகிறது.
விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் மிக முக்கியமானது. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய அறிவியல் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதை செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராவதுடன், மூளையின் செயல்பாடு, ஞாபக சக்தி, மற்றும் உடலின் தசைகள் வலுப்பெறுகிறதாம். இத்துடன், செரிமானம் சீராவதுடன், தூக்கமின்மையும் சரியாகிறது. தினமும் 15 – 50 தோப்பு கரணம் போடுவது பெரும் பலனை பெற்றுத்தரும்
✪<<17509267>>திமுகவில் <<>>இணைகிறேனா? செல்லூர் ராஜு ஓபன் டாக்
✪சிங்கம் <<17508888>>தூங்கக்கூடாது<<>>.. விஜய்யை சாடிய சரத்குமார்
✪நாடாளுமன்றத்தை <<17508838>>முடக்குவது <<>>நல்லதல்ல.. மத்திய அமைச்சர் அமித்ஷா
✪தங்கம் விலை <<17509891>>சவரனுக்கு <<>>₹80 குறைந்தது
✪SA 20 லீக் தொடர்: <<17508836>>பிரிட்டோரியா <<>>கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான கங்குலி ✪KGF புகழ் <<17509653>>தினேஷ் <<>>மங்களூரு காலமானார்.
Sorry, no posts matched your criteria.