India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலிவுட் நடிகர் கோவிந்தா தவறுதலாக தனது காலில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் காயமடைந்துள்ளார். தொடர்ந்து, அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இன்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியை துடைத்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக கை பட்டு குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவரது காலில் துப்பாக்கிக்குண்டு ஆழமாக துளைத்துள்ளதாக தெரிகிறது.
1) நதிகளின் நாடு என அழைக்கப்படும் நாடு எது? 2) ROM என்பதன் விரிவாக்கம் என்ன? 3) சேர அரசர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது? 4) இலங்கையின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன? 5) காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது? 6) ‘மனிதன் ஒரு அரசியல் மிருகம்’ எனக் கூறியவர் யார்? 7) பிரஞ்சு புரட்சியின்போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
நவராத்திரியை முன்னிட்டு இந்தூரில் நடைபெறும் ‘கர்பா’ நிகழ்ச்சியில், கோமியம் குடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என அம்மாவட்ட பாஜக தலைவர் சிண்டு வர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான இந்துவை இதன்மூலம் அடையாளம் காணலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சி, முதலில் பாஜக தலைவர்கள் கோமியம் குடித்து வீடியோ பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ₹240 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் விலை ₹15 குறைந்து ₹7,080க்கும், 1 சவரன் தங்கம் ₹120 சரிந்து, ₹56,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ₹30 குறைந்து ₹7,050க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் விலை ₹240 சரிந்து ₹56,400ஆக விற்கப்படுகிறது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்து காட்டிய சிவாஜியை அவரது பிறந்தநாளில் வணங்குவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “காலங்கள் மாறலாம், தொழில்நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகி இருக்கலாம். ஆனால் நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞனின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது” என புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ₹50 லட்சத்துக்கும் அதிக மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்கையில் 1% TDS வரி விதிக்கப்பட்டது. இந்த வரி அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது. எனவே, ₹50 லட்சத்துக்கும் அதிக மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்கையில், அதற்கு 1% TDS வரி செலுத்த வேண்டும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
நபார்டு வங்கியின் பணியாளர் மேலாண்மை பிரிவு காலியாக உள்ள 108 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-30. சம்பளம்: ₹35,000. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.21. கூடுதல் தகவல்களுக்கு <
நடிகர் ரஜினிகாந்தின் அடிவயிற்றில் உள்ள ரத்தநாள வீக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நிறைவடைந்தது. இதையடுத்து, அவரை தனி அறைக்கு மாற்ற இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, நேற்று மாலை சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.
ஒரே ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய அணி என்ற புதிய வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 2022இல் இங்கிலாந்து, 89 சிக்சர்கள் விளாசியிருந்தது. இதுவே ஒரு ஆண்டில் விளாசப்பட்ட அதிக சிக்சர்கள் என்ற சாதனையாக இருந்தது. அதை நேற்று, இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் முறியடித்தது. 1877இல் கிரிக்கெட் தொடங்கியது முதல் இதுவரையிலான காலத்தில் இதுவே ஒரு அணி விளாசிய அதிக சிக்சர்கள் ஆகும்.
2022-23ஆம் நிதி ஆண்டுக்கான தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதேபோல், நாட்டில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், மதிப்பு கூட்டுதலில் 3ஆம் இடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.