India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CM மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.8ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது. உதயநிதி துணை முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு நடக்க உள்ள முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை நடிகர் வடிவேலு நேரில் சந்தித்து வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவில் 103 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவ அதிகாரி, விஞ்ஞானி/பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், விஞ்ஞானி உதவியாளர், டெக்னீஷியன், வரைவாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: MBBS, M.E/M.Tech, Bsc, ITI (பணியிடங்களை பொறுத்து). சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.2,08,700 வரை. https://www.hsfc.gov.in/-இல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: அக்.9.
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி பூரண குணம்பெற வேண்டும் என நடிகர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட வீக்கம் அறுவை சிகிச்சையின்றி சரி செய்யப்பட்டு, ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன் என விஜய் ட்வீட் செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 பேர் வேலை தேடி சென்னை வந்துள்ளனர். ஆனால் எந்த வேலையும் கிடைக்காததால், உணவின்றி தவித்த அவர்கள், யாசகம் கேட்க வெட்கப்பட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பட்டினியாக படுத்து கிடந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி அவர்களில் 5 பேர் மயங்கி விழவே, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சமர்கான் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. Lord of charisma யார் என்பதை கண்டு பிடியுங்கள் என ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் Code word அளித்தது. இந்நிலையில் அது ஹிந்தி நடிகர் பாபி தியோல் என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அனிமல் படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்ற அவர், தமிழில் சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்துள்ளார். அடுத்த அறிவிப்பு யாராக இருக்கும்?
நடிகர் ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட வீக்கம் அறுவை சிகிச்சையின்றி சரி செய்யப்பட்டது என்றும், ரத்தக்குழாய் வீக்கத்திற்கு STENT பொருத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் ’வேட்டையன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அக்.10ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியாக உள்ளது. டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் ட்ரெய்லரை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
கருச்சிதைவை ஏற்படுத்தும் கன்றுவீச்சு நோய் எனும் நோய் கால்நடைகளுக்கு ஏற்படுவதை தடுக்க தமிழக கால்நடைத் துறை இலவச புருசெல்லோசிஸ் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வருகிற 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் கிடேரி கன்றுகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். SHARE IT
தமிழகத்தில் காமெடி தர்பார் நடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “மழைக்காலத்தில் போய் மழைநீர் வடிகால் பணி நடக்கிறது. இதுவாெரு 23ஆம் புலிகேசி அரசு” என்று கிண்டலடித்தார்.
Sorry, no posts matched your criteria.