India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகின்றது. இந்த விழாவில் ஆண்டுதோறும் ஒரு சிறந்த தமிழ் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு வரும் அக்.4 ஆம் தேதி நடைபெறும் விழாவில் ‘குரங்கு பெடல்’ படத்தின் இயக்குநர் கமலக் கண்ணனுக்கு விருது வழங்கி முதல்வர் ரங்கசாமி கவுரவிக்க உள்ளார். விழாவின் முடிவில் படம் திரையிடப்படுகிறது.
சீமானுக்கு எதிராக விஜயலட்சுமியுடன் கைகோர்த்து செயல்பட்டவர் வீரலட்சுமி. இவரது கணவர் பூவை கணேசன் (43), சீமானை பாக்சிங்குக்கு அழைத்து புகழ்பெற்றவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூட, சீமானை நாலே அடியில் நாக் அவுட் செய்துவிடுவேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், பக்கத்து வீட்டுக்காரருடன் இன்று ஏற்பட்ட தகராறில் அவரது மண்டை உடைக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக கடும் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளை காலை அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, சிலர் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி, கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட வேண்டும். கள்ளச்சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க தொழிலாளி ஒருவர் சென்னைக்கு வேலை தேடி வந்து பட்டினியால் உயிரிழந்த சம்பவம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “சென்னையில் பட்டினியால் ஒருவர் இறந்திருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. அதுவும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இது நடந்திருப்பதாக கூறுகிறார்கள். மக்களிடம் மனிதாபிமானம் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகமும் வருகிறது” என்றார்.
நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் குரூப் டி-யில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் சாய் கிஷோர் தலைமையிலான அணியில் பாபா இந்திரஜித், சாய் சுதர்சன், ஜெகதீசன், விஜய் சங்கர், ஷாருக்கான், அஜித் ராம், சித்தார்த் உள்ளிட்ட 17 பேர் இடம்பிடித்துள்ளனர். வாழ்த்துகள் TamilNadu டீம்.
அதிமுகவில் புதிய உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர்களை இபிஎஸ் நியமித்துள்ளார். கட்சியை பலப்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், மாவட்ட வாரியாக 82 மேற்பார்வையாளர்களை நியமித்த அவர், அக்.13க்குள் உரிமைச் சீட்டு வழங்கலை நிறைவு செய்து, மாவட்டச் செயலாளர்களிடம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் <<14242932>>இபிஎஸ் முகத்தில் <<>>செல்போன் விழுந்த சம்பவத்துக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அண்ணன் இபிஎஸ் மீது செல்போன் எறிந்தது கண்டிக்கத்தக்கது. இது முற்றிலும் அநாகரீகமான செயல். கருத்து வேறுபாடு இருந்தாலும் நம்முடைய மரியாதையும், சீர்திருத்தமும் குறைவாகி விட கூடாது” எனக் கூறியுள்ளார்.
BAN-க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். அதன்பின் விராட் கோலி வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு autograph போட்ட பேட்டை பரிசாக வழங்கினார். அதை அவரும் இன்முகத்துடன் வாங்கிக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் கலகலப்பாக பேசிக்கொண்டனர். மற்ற வீரர்களை மதிப்பதில் கிங் எப்போது கிங் தான்.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மதுரை, தருமபுரி, ஈரோடு, தேனி, திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.