India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “ஈரான் பெரிய தவறைச் செய்துவிட்டது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உறுதியையும், எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கான நம்முடைய உறுதியையும் ஈரானின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை” என தனது X பதிவில் அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிபெற்ற அணி என்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்குத் தள்ளி இந்தியா (180 வெற்றி) 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் AUS (414 வெற்றி), ENG (397 வெற்றி), WI (183 வெற்றி) ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா அணி 5ஆவது இடத்தில் உள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தங்குமிடங்களுக்கு அருகில் பாதுகாப்பு இருக்கவும் அவர்களை இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தியர்கள் அச்சப்பட வேண்டாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நேற்று. நள்ளிரவு முதல் இஸ்ரேலை, ஈரான் தாக்கி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மோடியை நிராகரித்து விட்டார்கள் என பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். மோடியின் பெயரை சொன்னால் வாக்குகள் கிடைக்கும் என்று பாஜ நினைத்தது, ஆனால் வாக்காளர்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி திறமை மீதிருந்த சந்தேகத்தை மக்களவைத் தேர்தல் முடிவுகள் மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார். லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் இந்த தாக்குதல் நேற்று நள்ளிரவு முதல் நடத்தப்பட்டுள்ளது.
நேபாள நிலச்சரிவில் சிக்கி 217 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாள்களாக அங்கு கனமழை பெய்து வருவதால், பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதில் 300 வீடுகள் நீரில் மூழ்கின. மழையைத் தொடர்ந்து பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு நடவடிக்கை தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்றதன் மூலம் இலங்கை வீரர் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இதுவரை முரளிதரன் 61 தொடர்களில் விளையாடி 11 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ள நிலையில், அஸ்வின் 43 தொடர்களில் விளையாடி 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். மூன்றாவது இடத்தில் SA வீரர் காலிஸ் 9 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 3ஆவது கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 65.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 7 மாவட்டங்களுக்கு உட்பட்ட 40 தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 24 தொகுதிகளுக்கு கடந்த செப்.18இல் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 61% வாக்குகள் பதிவானது. 2ஆவது கட்டமாக 26 இடங்களுக்கு செப். 25இல் நடைபெற்ற தேர்தலில் 56% வாக்குகள் பதிவாகின. அக்.8இல் தேர்தல் முடிவு வெளியாகிறது.
▶1869 – தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்த தினம்
▶1904 – முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்
▶1975 – கர்ம வீரர் காமராஜர் நினைவு தினம்.
▶1996 – பெரு நாட்டை சேர்ந்த விமானம் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 70 பேர் உயிரிழந்தனர்.
▶1959 – நடிகர் பாண்டியராஜன் பிறந்த தினம்.
உதயநிதியை துணை முதல்வராக்கியதில் எந்த தவறும் இல்லை என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்வு முதல்வராக செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு, யார் யாரை அமைச்சராக்க வேண்டும் என்பதில் தனிப்பட்ட அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் மற்றவர்கள் கருத்து சொல்வதும், வாரிசு அரசியல் என்று விமர்சனங்களை முன்வைப்பது தேவையில்லாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.