news

News October 30, 2024

JUST NOW: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை

image

பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்.31) தீபாவளி ஆகும். இந்நாளைக் கொண்டாட நாடு முழுவதும் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாட மக்கள் சாெந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், அதற்கு வசதியாக இன்று முற்பகலில் மட்டும் கல்வி நிறுவனங்கள் செயல்படும், மதியம் விடுமுறை என்று TN அரசு அறிவித்துள்ளது. இந்தத் தகவலைப் பகிருங்கள்.

News October 30, 2024

தீபாவளிக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும்: எல்.முருகன்

image

தீபாவளி பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டுமென மத்திய பாஜக இணையமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்து பண்டிகைகள் தவிர்த்து மற்ற பண்டிகைகளுக்கு மட்டும் ஸ்டாலின் வாழ்த்து சொல்வதாக சாடினார். இந்தாண்டு தீபாவளிக்கும் அவர் வாழ்த்து கூற வேண்டுமென்றும் எல். முருகன் வலியுறுத்தினார்.

News October 30, 2024

₹349க்கு 90 நாள் அன்லிமிடெட் கால், 30 ஜிபி டேட்டா

image

தீபாவளி பண்டிகையையொட்டி, BSNL ₹349 கட்டணத்தில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில், 90 நாள்கள் வேலிடிட்டியை BSNL வழங்குகிறது. மேலும், 90 நாள்களும் அன்லிமிடெட் அழைப்பு வசதி, 30 ஜிபி டேட்டா அளிக்கிறது. 30 ஜிபி டேட்டா தீர்ந்த போதிலும் 40 கேபிபிஎஸ் வேகத்துடன் தடையில்லா இணையதள வசதி வழங்குகிறது. ஆனால் இது அக் 28 – நவ.28. வரை ரீசார்ஜ் செய்வோருக்கே பொருந்தும் எனக் கூறியுள்ளது.

News October 30, 2024

யானைப்பசிக்கு சோளப்பொறி.. அன்புமணி கிண்டல்

image

யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்? என்று தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி 2022 நவம்பர் வரை ஓய்வு பெற்றவர்கள் 10,000 என்றும், அவர்களுக்கான ஓய்வுக்கால பயன்களின் மதிப்பு ரூ.3,000 கோடி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், 8ல் 1 பங்கு அளவுக்கு ரூ.372.06 கோடியே தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News October 30, 2024

300 விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

image

நாடு முழுவதும் 300 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை நாக்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாள்களாக தொடர்ந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து விசாரித்து, மகாராஷ்டிராவின் கோண்டா பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் உய்க்கி என்பவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் 13 நாள்களில் 300 விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.

News October 30, 2024

விமானத்தில் தேங்காய்க்கு ஏன் தடை?

image

விமானத்தில், துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்ட சில பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில், சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காயும் ஒன்று என்றால் வினோதமாக உள்ளது அல்லவா? வாருங்கள் இதற்கான காரணத்தை அறிவோம். தேங்காயில் எண்ணெய் சத்து இருப்பதால், நடுவானில் திடீரென அழுத்தம் காரணமாக தீப்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக சாெல்லப்படுகிறது. இதன்காரணமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2024

4 முறை அமெரிக்க தேர்தலில் வென்றவர்

image

அமெரிக்காவில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக முடியும். இதற்கு விதி விலக்காக ஒருவர் 4 முறை அதிபர் தேர்தலில் வென்றுள்ளார். அவர் யாரென தெரிந்து கொள்வோம். 1932இல் முதலில் வென்று அதிபரான பிராங்ளின் ரூஸ்வெல்ட், 1944 வரை 4 தேர்தல்களில் வென்றார். அவரின் பதவிக்காலத்தில் பொருளாதார மந்தநிலை, 2ஆம் உலகப் போரை அமெரிக்கா எதிர்கொண்டது. இதனாலேயே சிறந்த 3 அதிபர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

News October 30, 2024

RAIN ALERT: 2 நாள்கள் கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நவ.1, 2ஆம் தேதிகளில் IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை இங்கு தெரிந்து கொள்வோம்.
* நவ.1: ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர்
* நவ.2: தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி.

News October 30, 2024

மோட்டோ ரோலாவுக்கு தடை விதித்தது ஈரான்

image

மோட்டோ ரோலா போன்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் ஈரான் தடை விதித்துள்ளது. லெபனானில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு மோட்டோ ரோலா பேஜர்கள், இஸ்ரேல் உளவுத் துறையால் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து ஈரான், அந்த பேஜர்களை பயன்படுத்த முதலில் தடை விதித்தது. இதையடுத்து தற்போது முன்னெச்சரிக்கையாக மோட்டோ ரோலா போன்களுக்கும் ஈரான் தடை விதித்துள்ளது.

News October 30, 2024

காலை 7 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை

image

இன்று (அக்.30) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.

error: Content is protected !!