India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நியூசி., அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுதி விலகினார். அண்மையில் இலங்கையுடன் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் NZ படுதோல்வியடைந்த நிலையில், அவர் இம்முடிவை எடுத்துள்ளார். 2022ல் கேன் வில்லியம்சன் பதவி விலகலை அடுத்து கேப்டனாக பொறுப்பேற்ற இவர், மொத்தம் 14 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து, இந்தியா உடனான டெஸ்ட் தொடருக்கு டாம் லாதம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஐரோப்பாவில் உள்ள நேட்டோ போன்றது குவாட் அமைப்பு என்றும், அது ஆசியாவின் நேட்டோ, சீனாவிற்கு எதிரானது என்றும் கூறியிருந்தார். ஆனால் இது ஜப்பானின் கருத்து. இந்தியாவுடையது அல்ல. இந்தியா பல சீரமைப்புக் கொள்கையைப் பின்பற்றுகிறது. ஜப்பானை போன்று பல நாடுகளுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. புனே அருகேவுள்ள பவதான் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உடல் கருகி பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தது. சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் மீட்புப் பணியில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 112% அதிகம் பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், பருவமழை காலத்தில் வட மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பாெழிவு இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. அதேநேரத்தில், தென் மாவட்டங்களில் இயல்பான அளவிலேயே வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வருவாய் 6.5% அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ₹1.75 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரி ₹1.62 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 6.5% அதிகமாகும். ஜிஎஸ்டி மூலம் குஜராத்தில் ₹10,153 கோடி வசூலாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா முறையே 5% மற்றும் 7% ஜிஎஸ்டி வரி வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இந்தத் தகவலை பகிருங்க.
முன்னோர்களை வழிபடக்கூடிய உன்னதமான நாளாக மகாளய அமாவாசை உள்ளது. நாம் இந்த உலகிற்கு வர காரணமாக இருந்த முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக இந்நாளில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. முன்னோர்கள் முக்தி அடையவும், அவர்கள் ஆசியை முழுமையாக பெறவும் இன்று அன்னதானம் செய்யலாம். எள் விதைகள், பழங்கள் தானம் செய்யலாம். இதன் மூலம், முன்னோர்கள் திருப்தி அடைந்து தங்கள் சந்ததியினரை ஆசிர்வதிப்பதாக நம்பப்படுகிறது.
செவ்வாழைப் பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். செவ்வாழைப் பழத்தில் குறைவான கலோரிகள் இருப்பதால், எடையை குறைக்க விரும்புவோர் சாப்பிடலாம். இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கலாம். இதிலுள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது என்கிறார்கள்.
14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ₹5,858 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் முன் தொகையாக இதனை விடுவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ஆந்திராவுக்கு ₹1,036 கோடி, கேரளாவுக்கு ₹145 கோடி நிதி விடுவிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவுக்கு ₹1,492 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் அவருக்கு வீக்கம் இருந்துள்ளது. அறுவை சிகிச்சை இல்லாமல் அதை சரி செய்யும் பொருட்டு, மருத்துவர்கள் அவருக்கு ஸ்டென்ட் பொருத்தியுள்ளனர். இது ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். திட்டமிட்டபடி அப்போலோ ஹாஸ்பிடல் டாக்டர்கள் இதனை செய்து முடித்துள்ளனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழக காங்., சார்பில் இன்று 77 இடங்களில் பாத யாத்திரை நடக்க உள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்த யாத்திரை நடக்கிறது. சென்னையில் செல்வப்பெருந்தகை, திருச்சியில் திருநாவுக்கரசர், கடலூரில் KSஅழகிரி, ஈரோட்டில் EVKS இளங்கோவன் தலைமையில் இந்த யாத்திரை நடக்க உள்ளது. அதேபோல், மற்ற இடங்களில் MP, MLAக்கள் தலைமையில் யாத்திரை நடத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.