India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உயர்கல்வித் துறை செயலராக பதவி வகித்து வந்தார். இதையடுத்து, உயர்கல்வித் துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பதால், அவரை இப்பதவிக்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் அமோஸ் (84) காலமானார். 1971இல் ஹாலிவுட்டில் அறிமுகமான அவர், “லாக் அப்”, “டை ஹார்டு 2” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். “குட் டைம்ஸ்” உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். கடைசியாக அவர் 2023இல் வெளியான “தி லாஸ்ட் ரைபிள்மேன்” படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காந்தி சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிலைக்கு CM ஸ்டாலின், துணை CM உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அடையாறு காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
வயிற்று வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் ஆனார். உணவு ஒவ்வாமை காரணமாக நேற்றிரவு கடும் வயிற்று வலியால் அவதியடைந்த அவர், சென்னையில் உள்ள பிரைவேட் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நலம் தேறியதால் வீடு திரும்பினார். எனினும், அவர் அடுத்த 2 நாள்களுக்கு ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அக். 8ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இபிஎஸ் அறிவித்தார். அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இப்போராட்டம் நடைபெறும் எனவும் கூறினார். ஆண்டுதோறும் 6% சொத்து வரி உயர்த்தப்படும் என்ற அறிவிப்பால் குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணமும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, நீலகிரி, கோவை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யலாம் எனக் கூறியுள்ளது. தொடர்ந்து, நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
‘தளபதி 69’ படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கெனவே ’பீஸ்ட்’ படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்திருந்தார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகும் இப்படம் மீது எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை படக்குழு அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. முன்னதாக, பாபி தியோல் வில்லனாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலை சும்மா விட மாட்டோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய ஈரான் கூட்டுப் படைகளின் தலைவர் முகமது பகேரி, இஸ்ரேல் தாக்கினால் அதை விட பல மடக்கு தீவிரமாக அடுத்த தாக்குதலை முன்னெடுப்போம் எனக் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா, ஐரோப்பாவால் கூட அடக்க முடியாத இஸ்ரேலை அடக்குவோம் என்றும் எச்சரித்துள்ளார். நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது..
ரஜினியின் வேட்டையன் பட ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. ரஜினியின் 170ஆவது படமான வேட்டையனை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்ததையடுத்து, வேட்டையன் படம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
மத்திய அரசு நிதி வழங்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்ட பகுதி நேர, சிறப்பு ஆசிரியர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இன்னும் அளிக்கப்படவில்லை. மத்திய அரசு நிதியை விடுவித்தால் தான் ஊதியம் வழங்க முடியும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், தமிழக அரசின் நிதியில் இருந்து ஊதியம் வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.