India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய்யின் கடைசி படமான “தளபதி 69”, பாலகிருஷ்ணாவின் “பகவந்த் கேசரி” படத்தின் ரீ மேக்காக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக-வை தொடங்கிய விஜய், தனது 69ஆவது படமே கடைசி என அறிவித்து இருந்தார். ஹெச். வினோத் இயக்கவுள்ள இப்படம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணா, தனது நண்பரின் மகளை பாசத்துடன் வளர்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்தும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலை ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக நடத்தியதாகவும், ஆனால் அப்போது காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியதாகவும் தெரிவித்தார்.
IND vs AUS இடையிலான டெஸ்ட் தொடர், நவ.22-ல் தொடங்குகிறது. இத்தொடரில் முகமது ஷமி விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் குணமாக 6-8 வாரங்களாகும் எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், ஆஸி.,க்கு எதிரான இத்தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே, இதில் ஷமி இல்லாதது IND-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
SK புரொடெக்ஷன் பெயரை தவறாகப் பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகார்த்திகேயன் எச்சரித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், SK தயாரிப்பு நிறுவனம் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், SK புரொடெக்ஷன் பெயரில் சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளை யாரும் நம்ப வேண்டாமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாக சைதன்யா, சமந்தா பிரிய தெலங்கானா முன்னாள் CM KCRன் மகன் கேடிஆர்தான் காரணம் என்று அந்த மாநில அமைச்சர் கோண்டா சுரேகா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “பல ஹீரோயின்கள் விரைவில் திருமணம் செய்து காெண்டு திரைத்துறையில் இருந்து வெளியேற கேடிஆரே காரணம். போதை மருந்து பார்ட்டி வைக்கப்படும், பிறகு வீடியோ எடுத்து மிரட்டுவார்கள். இது பலருக்கு தெரியும்” என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
டெல்லியில் ₹2,000 கோடி மதிப்பு கொகைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின்பேரில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 560 கிலோ கொகைனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேரிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான ICC தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்தியாவின் ஸ்டார் வீரர் பும்ரா அசத்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 870 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். இதுவரை டெஸ்ட் தரவரிசையை தக்கவைத்திருந்த மற்றொரு ஸ்டார் வீரர் அஸ்வின் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவர் கூட வங்கதேச டெஸ்ட்டில் 11 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள அனைத்து இந்து கோயில்களில் இருந்தும் சாய்பாபா சிலைகள் அகற்றப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சனாதன் ரக்ஷா தளம் (SRD) மற்றும் பிராமண சபா இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய SRD தலைவர் அஜய் சர்மா, “சாய்பாபாவை வழிபட விரும்புவோர் அவருக்கான கோயிலில் வழிபட்டுக் கொள்ளட்டும். இந்து கோயில்களில் சாய்பாபா சிலை வைப்பது சனாதனத்துக்கு எதிரானது” என்றார்.
“காவாலா…”, “ஊ சொல்றீயா மாமா…” உள்ளிட்ட ஆபாச அசைவுகளுடன் கூடிய பாடல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வன்முறை, போதைப்பொருள், பாலியல், அவதூறு காட்சிகள் கொண்ட பாடல்களின் இசை குழந்தைகளை ஈர்க்கிறது. ஒரு கட்டத்தில், பெற்றோரிடம் வரிகளுக்கான அர்த்தத்தை கேட்டு பெற முடியாத சூழலில், மற்றவர்களிடம் தகவலை பெற முயற்சிப்பது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு, கால்நடைத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளராக கே.கோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக ராஜேஷ் லக்கானி, சமூக நலத்துறை ஆணையராக ஆர்.லில்லி, மின்வாரிய தலைவராக கே.நந்தகுமார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.