India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள ‘அமரன்’ படம் தீபாவளி தினமான அக்.31ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹே மின்னலே’ என்ற பாடல் நாளை மறுநாள் (அக்.4) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ஜி.வி.பிரகாஷ் குமாரின் 700வது பாடலாகும். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார்.
1-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலை திருவிழாக்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளன. 1-5ஆம் வகுப்புக்கு அக்.22-24 வரையும், 6 – 8ஆம் வகுப்புக்கு அக்.15 -17 வரையும், 9-12ஆம் வகுப்புக்கு அக்.21 – 24 வரையும் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் பதிவிட பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘தளபதி 69’ படத்தில் நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மலையாள நடிகையான மமிதா, ‘பிரேமலு’ படத்தின் மூலம் தென்னிந்தியாவின் சென்சேஷன் நடிகையாக மாறினார்.
இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்வோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா கொல்லப்பட்டதில் இருந்து கடுங்கோபத்தில் உள்ள ஈரான், நேற்று திடீரென இஸ்ரேல் மீது வான்வழி ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படும் எனவும் அந்நாடு எச்சரித்துள்ளது. இதனிடையே, போர் பதற்றத்தை தணிக்க ஜி7 கூட்டத்திற்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.
ஏழைகளின் வீடுகளை புல்டோசரால் இடிப்பதை காந்தி ஏற்றிருப்பாரா? என ப.சிதம்பரம் வினவியுள்ளார். காந்தி இருந்திருந்தால் மோடி அரசை ஆதரித்திருப்பார் என அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் பேசியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ப.சி., விருப்பமில்லா மக்கள் மீது பொதுசிவில் சட்டத்தை திணிக்கவும், J&K மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேசம் ஆக்கியதையும் காந்தி ஏற்றுக்கொண்டிருப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் செயல்பாடே, தங்களை தாக்குதல் நடத்த தூண்டுவதாக, இஸ்ரேல் ராணுவ அதிகாரி கர்னல் அவிச்சாய் அட்ரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், லெபனானை சுற்றி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரித்துள்ளார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு அருகில் இருக்கும் மக்களுக்கு ஆபத்து உள்ளதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தற்போது, மகளிர் மாநாடாக மாறிவிட்டதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடமே ஆதரவு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இதுதான் அவர்களது கொள்கை என சாடினார். மேலும் இன்று, காந்தியை தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மட்டும் திருமா., மரியாதை செலுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவில் பேறுகால விடுப்பாக பணிபுரியும் மகளிருக்கு 6 மாத காலம் ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையின் எண்ணிக்கை, உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது.
சான் மேரினோ நாட்டில் மிக அதிகமாக 635 நாள்கள் பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. இதற்கடுத்து, பல்கேரியாவில் 410, அல்பேனியாவில் 365, போஸ்னியாவில் 365, சீனாவில் 158, இங்கிலாந்தில் 42 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.
நேருக்கு நேர் போருக்கு தயாராக இருக்கும் இஸ்ரேலும், ஈரானும் பரம எதிரிகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதே 2 நாடுகளும் 1958- 1979 வரை நெருங்கிய நட்பு நாடுகளாகும். குறிப்பாக, துருக்கியுடன் சேர்ந்து ராணுவ உடன்படிக்கையும் செய்திருந்தன. இதற்கு ஈராக்கில் இருந்த சதாம் உசேன் அரசை எதிரியாக கருதியதே முக்கிய காரணமாகும். எனினும், ஈரானில் ஷா ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியால் நட்பு முறிந்தது.
விவசாயிகளின் வேதனை குறித்து பாஜகவுக்கு தெரியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவுக்கு விவசாயிகள் குறித்தோ, ராணுவ வீரர்கள் குறித்தோ அக்கறை கிடையாது என்று சாடினார். ஆர்எஸ்எஸ்சில் விவசாயிகளோ, ராணுவ வீரர்களோ இல்லை என்பதால், அவர்களின் வேதனை பாஜகவுக்கு தெரியாது என்றும் அவர் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.