news

News October 2, 2024

“மது ஒழிப்பு மாநாடா? மது பிரியர்கள் மாநாடா?” – H.ராஜா

image

VCK நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் செயல் என H ராஜா விமர்சித்துள்ளார். இது மது ஒழிப்பு மாநாடா அல்லது மது பிரியர்கள் மாநாடா? என கேள்வி எழுப்பியவர், பெண் வாக்காளர்களை கருத்தில் கொண்டு குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் மாநாடு நடப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், மதுவை ஊக்குவிக்கும் திமுகவின் பிரதிநிதியாக இருக்கும் விசிக, மது ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது என்றும் சாடியுள்ளார்.

News October 2, 2024

எனது விவாகரத்தில் தலையிடாதீர்கள்: சமந்தா

image

தனது விவாகரத்து பற்றி தெலங்கானா அமைச்சர் <<14254655>>கொண்டா சுரேகா<<>> பேசியதற்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார் சமந்தா. “ஒரு அமைச்சராக, உங்களின் வார்த்தைகள் கண்ணியமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களின் பெர்சனலை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம் என்பதோடு, எந்த அரசியல் சதியும் அதில் இல்லை. உங்கள் சண்டையில் எனது பெயரை இழுக்காதீர்கள்” என சமந்தா கூறியுள்ளார்.

News October 2, 2024

மோடியின் செல்வாக்கு சரிந்தது: பிரசாந்த் கிஷோர்

image

3வது முறையாக பதவியேற்றுள்ள மோடி, பலவீனமான பிரதமராகி விட்டதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகளை கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பார்த்து வருகின்றனர். கடந்த காலத்தை விட மோடியின் புகழும், செல்வாக்கும் குறைந்துவிட்டது. மக்களவை தேர்தலில் பீகாரில் 12 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றிய பிறகும் கூட முன்னேற்றம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

News October 2, 2024

மதுவிலக்கு சாத்தியமில்லை: அமைச்சர் ஒரே போடு!

image

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைக்கு எதிராக விசிக சார்பில் இன்று மதுவிலக்கு மாநாடு நடத்தப்பட்டது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், மதுவிலக்கு கொண்டு வரப்படுமா என அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அண்டை மாநிலங்கள் அனைத்திலும் மது கிடைக்கிறது. அப்படி இருக்கையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டு வருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார்.

News October 2, 2024

CSK-வுக்கு அடுத்ததாக RCB..மேல ஏறி வர்றோம்..!

image

CSK-வுக்கு அடுத்தபடியாக RCB அணியின் இன்ஸ்டாகிராம் பக்கம், 15 மில்லியன் பாலோயர்களை கடந்துள்ளது. 16 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் CSK முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 14.1 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் 3ஆம் இடத்திலும், 6.4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் கொல்கத்தா அணி 4ஆம் இடத்திலும் உள்ளது. அதேபோல், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான்- 4.4, குஜராத்- 4, டெல்லி- 3.9 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளது.

News October 2, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

வடக்கு வங்கக்கடலில் அக்.4ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ( இரவு 10 மணி வரை) மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News October 2, 2024

33% ஆண்கள் மதுவுக்கு அடிமை: VCK

image

தமிழ்நாட்டில் 33% ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி இருக்கும் நிலையில், 10% பெண்கள் விதவைகளாக உள்ளதாக VCK MP ரவிக்குமார் வேதனை தெரிவித்துள்ளார். சமூக அவலம் தொடரக் கூடாது என்பதற்காகவே மதுவிலக்குக் கோரி மாநாடு நடத்தப்படுகிறது. மது ஒழிப்பை இளைஞர்களும் பெண்களும் பரப்புரை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News October 2, 2024

டாஸ்மாக் கடைகளை மூட கால அட்டவணையை வெளியிடுக

image

மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என விசிக ‘மது – போதைப் பொருள் ஒழிப்பு’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபான கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை மாநில அரசு அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

News October 2, 2024

அமைச்சருக்கு கெடு விதித்த நாகார்ஜுனா!

image

சமந்தா குறித்து தெலங்கானா <<14254655>>அமைச்சர் கொண்டா சுரேகா<<>> பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக அரசியலில் இருந்து விலகியிருக்கும் திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். எனது குடும்பத்தை பற்றி நீங்கள் பேசியது முற்றிலும் பொய். உடனடியாக உங்கள் பேச்சை வாபஸ் பெறுங்கள்” எனக் கூறியுள்ளார்.

News October 2, 2024

சீன பொருள்களுக்கு ஸ்கெட்ச் போடும் இந்தியா

image

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினி, லேப்டாப், டிரோன்களை கண்காணிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சீன CCTV கேமராக்களை சோதனையிடும் நடைமுறை, இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, தனிநபர் தகவல்கள் அண்டை நாடுகளின் ஏஜென்ஸிகளால் திருடப்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!