India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரு தமிழ் படத்தில் பொதுவாக 60-62 காட்சிகள் இருக்கும். ஆனால் ‘வீர தீர சூரன்-2’ படத்தில் மொத்தமே 10-15 காட்சிகள் தான் இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் 5-7 நிமிடங்கள் இருக்கும் என கூறியுள்ளார். மேலும், முதலில் ரிலீசாகும் 2ஆம் பாகம் சண்டையில் தொடங்கும் எனவும், முதல் பாகத்தில் அதற்கான காரணம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
*மேஷம் – வெற்றி கிடைக்கும் *ரிஷபம் – கோபத்தை தவிர்ப்பது நல்லது *மிதுனம் – குழப்பமான மனநிலை உருவாகும் *கடகம் – வியாபாரம் விருத்தி அடையும் *சிம்மம் – உடல் அசதியாக இருக்கும் *கன்னி – பாராட்டு கிடைக்கும் *துலாம் – உடல் நலம் மேம்படும் *விருச்சிகம் – வாழ்வு உண்டாகும் *தனுசு – நம்பிக்கையுடன் செயல்படுங்கள் *மகரம் – பணிவுடன் இருங்கள் *கும்பம் – ஆர்வமுடன் செயல்படுங்கள் *மீனம் – சுகமான நாளாக அமையும்
ஜப்பானில் 2ஆம் உலகப்போரின் போது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு, 79 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியாசகி விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் குண்டு வெடித்ததால், 87 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், ஜப்பான் தற்காப்பு படைகள் உலகப்போரின் போது அமெரிக்கா வீசிய 2,348 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.
உ.பியில் கடவுள் சிலைகளை திருடிச் சென்ற ஒருவர், சிலைகளுடன் மன்னிப்பு கடிதத்தையும் கோயிலில் வைத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிலையை திருடியதில் இருந்து கெட்ட கனவுகள் வருவதாகவும், தன்னால் நிம்மதியாக உண்ணவோ, தூங்கவோ முடியவில்லை என்றும் அந்த திருடன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகன் மற்றும் மனைவியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிலையை திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமத்துவம், சமூக நீதி தழைத்தோங்குவதாக பலர் கூறுகின்றனர். ஆனால், விழுப்புரம் ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் இருளர் சமுதாயத்தை சங்கீதாவை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதி ரீதியாகத் திட்டி ஆதிக்க கும்பல் அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக, இன்று நடைபெற்ற கிராமச் சபை கூட்டத்தை புறக்கணித்து, அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
ஹிஸ்புல்லா படையினர் நடத்திய பயங்கர தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தினர் 8 பேர் உயிரிழந்தனர். இதனை இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது. தெற்கு லெபனானில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படையினர் இந்த தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் 3 போர் விமானிகளும் அடக்கம். ஏற்கனவே, ஈரானின் அதிரடி தாக்குதலால் நிலைக்குலைந்துள்ள இஸ்ரேல், தற்போது லெபனானிலும் தங்கள் படையினர் தாக்கப்படுவதால் விழிப்பிதுங்கி நிற்கிறது.
கவர்னர் மாளிகையில் இன்று நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் ஆளுநர் ரவி பேசுகையில், “தமிழகத்தில் சமூக நீதியின் பெயரில் கூச்சல் இருந்தாலும் தலித் மக்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான குற்றம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல, தலித் பெண்களுக்கு எதிரான பலாத்கார வழக்குகளில் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது” என்றார்.
பாட்ஷா என்ற ஒரு படம், 100 மாஸ் படங்கள் உருவாக காரணமாக இருந்ததாக இயக்குநர் லிங்குசாமி பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதேபோல், காக்க காக்க, அஞ்சாதே, வேட்டையாடு விளையாடு ஆகிய 3 படங்களும், பல ஆக்ஷன் / Investigation த்ரில்லர் படங்களுக்கு Inspire ஆக இருந்துள்ளன. ராட்சசன், போர் தொழில் உள்பட பல படங்களில் இதன் தாக்கம் தெரியும். இதை போர் தொழில் படத்தின் இயக்குநரே தனது பேட்டியில் கூறியுள்ளார்.
விடுபட்ட மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வழங்கப்படும் என கனிமொழி MP தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை கணக்கெடுப்பு குறித்த பணிகள் தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டதாக கூறிய அவர், விடுபட்டவர்களுக்கு உரிமைத் தொகை ₹1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் செய்துவருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தங்கள் மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்துசெய்ய வேண்டும் என்கிறது பீகாரின் புதிய கட்சியான `ஜன் சுராஜ்’. மதுவிலக்கால் பீகாருக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுவதாக கூறும் அக்கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர், மது விற்பனையால் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக அம்மாநில கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்கிறார். இது சரியா?
Sorry, no posts matched your criteria.