India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய மத விழாவில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவு நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படகில் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது மொக்வா என்ற பகுதியில் படகு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீரில் மூழ்கியவர்களை தேடு பணி தீவிரம் அடைந்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நில மோசடி புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (மூடா) சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, காசோலை முறைகேடு வழக்கில் மைசூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. 90 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்திற்கு அக்.5இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 1 மாதத்திற்கு மேலாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி நிலவும், இம்மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை UAEஇல் இன்று தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளது. AUS அதிகபட்சமாக 6 தடவை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலகக்கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. முதல் ஆட்டத்தில் வங்கதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த சில நாள்களாக அங்கு வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், நேற்று முன்தினம் முதல் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதி விடுவார் என டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். திமுகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, அவர்கள் வெற்றி பெற இபிஎஸ் உழைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்றும், தொண்டர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் இபிஎஸ்க்கு வரும் தேர்தலில் படுதோல்வி அடைவார் எனவும் கூறினார்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இதில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார். சின்னர் முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இஸ்ரேலுக்குள் நுழைய ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்க்கு அந்நாடு தடை விதித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்த நிலையில், இந்த சம்பவத்தில் குட்டரெஸ் ஏன் அமைதி காக்கிறார் எனவும் அந்நாடு கேள்வி எழுப்பியுள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ஒரே நபராக அவர் இருப்பதாகவும் இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
▶1945 – முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா பிறந்த தினம்
▶2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.
▶1957 – நடிகர் சத்யராஜ் பிறந்த தினம்
▶1995 – சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் மறைந்த தினம்
▶2015 – ஆப்கானித்தானில் மருத்துவமனை மீது நடைபெற்ற தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.